மனிதனை நினை மதங்களை மற

வண்டியிழுக்கும் எருது, அதிகச் சுமை வண்டியில் ஏற்றப்படும் பொழுது வாயில் நுறைதள்ள, மூச்சிறைக்க, கண்ணீர் வழிய திணறி இழுக்குமே தவிர தனக்கு ஏன் வலிக்கிறது, நான் ஏன் இச்சிரமத்துக்கு ஆளானேன் என்று சிந்திக்காது. காரணம் இயற்கை அதன் தன்மையை அப்படி நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன், தனக்கு வரும் துன்பங்களை ஆராய்ந்து அதில் இருந்து விடுபட அல்லது அதன் காரணங்களையாவது தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் சிந்திக்க மறுத்தோ, அவகாசம் இல்லாமையாலோ அந்தப் பொறுப்பை வேறொரு இடத்தில் ஒப்படைக்க நினைப்பதும், அந்தப் பொறுப்பை ஏற்பவர் கடவுள் என்று நம்புவதும் நகைப்புக்கு இடமளிக்கிறது.

இறை என்ற ஒன்றை நம்புகின்ற பொழுது நேரடிப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே அது இருக்கும். வருகிற துன்பம் எத்தகையதாயினும் அதை நீங்களே அனுபவம் செய்கிறீர்கள். இதில் கடவுள் பங்கு என்று எதைச் சொல்வது.

துன்பம் வருகிற போதுதான் கடவுளையே நீங்கள் அறிந்து கொள்ள முடியும் (குந்தி மஹாபாரதத்தில் கண்ணனிடம் சொன்னது, மேலும் துன்பங்களைத் தந்து எப்பொழுதும் கண்ணனையே நினைக்கும்படி வரம் தரும்படியும் கண்ணனைக் கேட்டதாகக் கதை சொல்கிறது) என்ற வாசகத்தைப் படிக்கிற போது எனக்குச் சிரிப்புத் தான் வரும். துன்பத்தைக் கொடுத்துத் தான் தன் இருப்பை நிரூபிக்கும் இறைவனை விட நான் இவ்வுலகத்தின் அணைத்து இன்பத்தையும் தருகிறேன் என்னைப் பணிவாயா என இயேசுவைக் கேட்ட சாத்தான் இறைவனை விட மேலானது என்று நான் நினைக்கிறேன்.

நீ எங்கள் கடவுளை மறுக்கிறாய், நிந்திக்கிறாய் என்கிறீர்களா? நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாதவன். நான் கேள்விகேட்டாள் நான் நிந்திக்கிறேன் என்று எடுத்துக் கொள்வீர்களா?

நீங்கள் இறையை ஏற்பவர்கள்தானே? உங்கள் கடவுள் உங்களை சோதிக்கிற போது, அதை ஏன் அப்படியே அது அவன் செயல் என்று ஏற்க மறுக்கிறீர்கள். உதாரணமாக உங்களுக்கு நோய் வந்தால் அதுவும் இறைவன் செயல்தானே, அதை அப்படியே அதன் போக்கில் விட்டு விடாமல் அதற்கு எதிராக செயலாற்றி உங்களை அந்த நோயில் இருந்து விடுபட முயற்சிப்பதென்பது, நீங்கள் கடவுளின் செயலை எதிர்க்கிறீர்கள் அல்லது கடவுள் இல்லை என்று எதிர்வினையாற்றி நிரூபிக்கிறீர்கள்.

இது நீங்கள் இயற்கையையும் இறைவனையும் ஒன்றாக நினைப்பதன் விளைவே. இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது. இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டதாக நான் நினைக்கவில்லை, மாறாக நீங்கள் குறிப்பிடும் இறைவனானவர் இயற்கைக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க முடியும். வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம், இயற்கையும் இறைவனும் அவனே, கடவுளும் சாத்தானும் அவனே, ஆழிலைக் கண்ணனும் அரக்கனும் அவனே என்று ஏற்றுக் கொள்கிறபோது, எது நடந்தாலும் அது அவன் செயல் என்று திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.

ஆனால் அப்படி ஏற்கிறபோது அனைத்து மதங்களும் கட்டமைத்து வைத்திருக்கும் இறைவன் மிகவும் நல்லவன் என்ற நம்பிக்கையில் பாதிப்புவரும்.காரணம் துன்பத்தில் இருந்து விடுதலை அழிப்பவரே தேவைப்பட்டால் இயற்கை சீற்றங்களின் மூலியமாக பலரை கொல்லுவார் என்றும் ஏற்கிறபோது அது மதங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் கடவுள் பெயருக்கு இழுக்குத்தானே.

இங்கே பிரச்சினையே மதங்கள் ஏற்படுத்தி இருக்கும் கடவுள் கோட்பாடுகளே காரணமென நினைக்கிறேன். நடக்கின்ற நல்லதுக்கெல்லாம் கடவுளின் செயலென்றும் கெட்டதுக்கெல்லாம் சாத்தான் என்றும் கிறித்துவ மதம் சொல்கிறது. கர்த்தரே உலகைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும் சாத்தானையும் சேர்த்தே படைத்தாரா? இல்லை சாத்தானும் கடவுள் போல் தான் தோன்றியா என்ற கேள்வி எழவே செய்கிறது.

முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப தண்டனையும் பலனையும் தருபவர் ஏதோ ஒரு இந்துக் கடவுள் என்றால், பாவமும் புண்ணியமும் மனிதர்கள் செய்கிற போது அவர்களை படைத்த படைப்பாளியான கடவுளுக்குத் தானே பலனும், தண்டனையும் போய்ச் சேரவேண்டும்?.

அதை விடுத்து இது கலிகாலம், மனிதர்கள் பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களை அழித்து மீண்டும் உலகத்தை படைக்கப் போகிறார் என்றும், பைபிளில் கூறப்பட்டுள்ள படி கர்த்தரே உலகையும் அதில் மனிதர்களையும் படைத்து பிறகு மாமிசமான மனிதன் தவறு செய்ய ஆரம்பித்து விட்டதால் அவர்களை அழித்து மீண்டும் ஒரு உலகைப் படைத்தார் என்பதையும் ஏற்பதற்கில்லை. ஏனெனில் இதில் அடிப்படையாக பார்த்தால் படைப்பே தவறாக இருப்பதால் தானே மனிதர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. இது தன்னால் நிகழ்ந்த தவறு தானே என்ற உணரக்கூடிய பொது அறிவுகூட இல்லாதவரா உங்கள் கடவுள் என்று கேட்கத்தோன்றுகிறது.

ஈராயிறத்துப் பணிரெண்டில் உலகம் அழியும் என சொல்லி வருகிறார்கள். பைபிள்படி நல்லவர்களான நோவாவும் அவர் குடும்பத்தினரையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் கர்த்தர் அழித்துவிட்டார் என்றே வைத்துக் கொண்டால், இன்றைக்கு இருக்கும் உலக மக்கள் அனைவரும் நல்லவர்களான நோவா குடும்பத்தவர்களே என்கிற போது எல்லோரும் தவறு செய்ய நேரிட்டது எப்படி?

நம்புங்கள் நடக்கும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கின்ற கடவுள் கோட்பாடுகளை சந்தேகமாகக் கேள்வி கேட்டாள் நான் நாத்திகனாம். முதலில் அதைச் சொல்ல (மதவாதி) உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. இஸ்லாத்தில் எல்லாம் வல்ல இறைவனே (அல்லா) உலகைப் படைத்தார் என்கிறது, கிறிஸ்துவர்களுக்கு கர்த்தரே உலகைப் படைத்தார், நீங்கள் கிறிஸ்துவாகப் பிறப்பதற்கும், இஸ்லாமியராகப் பிறப்பதற்கும் ஏற்கனவே இந்துக் கடவுள் விதி எழுதிவிட்டார் என்கிறது இந்து மதம்.

இதில் எந்த மதத்தினரும் அடுத்த மதத்தினரின் கடவுள் கொள்கைகளையோ கட்டமைப்புகளையோ ஏற்க மாட்டார்கள். ஆக கோவியார் சொன்னது போல் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு அவர்கள் கடவுள் பெயராலும் கட்டமைப்பாளும் நாத்த்கரே.

வெறும் தன்னலம் கருதியே பக்தியாளர்களாக இருந்து கொண்டு தங்களை ஆண்மீகவாதிகள் என்றும் ஆண்மீகம் பேசுபவர்கள் என்போர் அவர்களை அவர்களே சீர்தூக்கிப்பார்த்துக் கொள்வது நல்லது. இறை அச்சம் அல்லது சொர்கம் பற்றிய கணவில் நல்லவர்களாக இருப்பவர்களைவிட இப்படிப்பட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு எதல்லாம் துன்பமோ அதை மற்றவர்களுக்குச் செய்யாமலும் கடவுள், மத, சாதி பேரைச் சொல்லி சக மனிதனிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் கடவுளை மற மனிதனை நினை என்று வலியுறுத்தும் நாத்திகனே ஆத்திகனைவிட மேலானவன்.

எத்தனை எத்தனை மதங்களடா?

அதில் எத்தனை எத்தனை கடவுளடா?

எத்தனை எத்தனை கொள்கைகளடா?

அனைத்திலும் அடிப்படைக் கொள்கை என்றாலோ

அடுத்த மதத்தினரை அழிப்பதுதானோடா?

(இல்லாத) கடவுளே உங்களைக் கேட்பதெல்லாம் இதுதான், இனி ஒரு அவதாரம் வேண்டாம், இன்னுமொறு மதத்தை பூமி தாங்காது.

தாலி புனிதமா?


திருமணங்களை திருவிழாவாக நடத்துவது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. திருமணத்தின் நோக்கம் சந்ததிகளை உருவாக்குவதுதான் என்று சொன்னாலும், அதன் மற்றொரு நோக்கம், காமம் என்னும் தீய உணைர்வை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதே.


இல்லற வாழ்க்கையில் இனையும் ஓர் ஆணையும் பெண்னையும் இனைக்கும் ஒரு பாலமாக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தாலியும், கிறிஸ்த்துவர்களுக்கு மோதிரமும் விளங்குகிறது . தாலியோ மோதிரமோ அது ஒரு பெண் திருமணமானவள் என்பதை குறிக்கும் ஒரு அடையாளச்சின்னமே. இந்துத் திருமணங்களில் தாலி கட்டுவது என்பது ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. ஏனெனில் இந்துத் திருமணங்களில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான தனித்தனியான அடையாளச்சின்னங்கள் அணியப்பட்டாலும், பெண் மட்டுமே அதை அவளோ / அவள் கணவனோ இறக்கும் வரை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பது நிர்பந்தம். ஆணுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை என்கிறபோது இதை ஆணாதிக்கம் என்று கூறாமல் வேறென்னவென்பது.


தனக்கு எதிரே வரும் பெண் திருமணமானவள் மாற்றான் மனைவி தவறான எண்ணத்தில் பார்க்கக் கூடாது என்பதை அவளை பார்க்கும் ஆண் தெரிந்து கொள்ளவே பெண்ணிற்கு தாலி அணியப்படுகிறது என்று பெரும்பாலானவர் கூறுவர். இங்கே ஒரு விடயம் தெள்ளத் தெளிவாகிறது, எந்த ஒரு ஆணும் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து இவள் திருமணமானவளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டு தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமோ அவளைச் சார்ந்தவர்களிடமோ தெரியப்படுத்தும் உரிமை இருக்கிறது என்பது நிதர்சனம்.

ஆனால் அதே உரிமை பெண்ணிற்கு மறுக்கப்படவே செய்கிறது, காரணம் ஆண் வர்கம் கலாச்சாரம், பெண்ணீயம் என்று பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தி இருக்கும் கட்டமைப்புகளே.


சரி விடயத்துக்கு வருவோம். தாலி புனிதமானதா?


தாலிகட்டுவதாலே கணவனும் மனைவியும் காலம் காலமாக சேர்ந்து வாழ்கிறார்களா என்றால் என்னைப் பொறுத்து இல்லை என்றே சொல்வேன்.

திருமண பந்தம் நீடிப்பதென்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற நற்பண்புகளைப் பொறுத்து அமைவது. இதுலே தாலிக்கு எப்படி புனிதம் வந்தது என்றே தெரியவில்லை. பெண்கள் தாலிக்கு பெருமரியாதை தருவதெல்லாம் ஆண் வர்கம் பெண்கள் பற்றி கட்டமைத்து வைத்திருக்கும் கட்டுமானங்களே. எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் அவனை மனைவியானவள் மதித்து / உயர்வாக நினைத்து நடக்க வேண்டும் என்று தாலிக்கு புனிதம் கற்பித்து இருக்கக்கூடும்.


இன்றையச் சூழலிலும் பெண்களுக்கு தாலி கட்டுவது வழக்கமாகவே இருந்து வந்தாலும், படித்த பெண்கள் தாலிக்கு அவ்வளவு முக்கியயத்துவம் கொடுப்பதில்லை. தாலி புனிதம் என்றால் அதை பிறர் பார்க்கும் படி வெளியில் தெரியுமாறு அணிவதில்லை, மாறாக மறைக்கவே விரும்புகின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் அணியும் உடைக்கு தாலி பொறுத்தமில்லாமல் இருப்பதாக எண்ணி அதை கழட்டி வைக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.


எந்தக் காரணத்தினாலோ, தாலியை கழட்டி விட்டால் தன் கணவருக்கு ஆபத்து நேரிடும் என்று சில பெண்கள் மூடத்தனம் கொண்டிருப்பதெல்லாம் தாலி பற்றிய வீன் பெருமைகளையும், புனித்தன்மை கொண்டது என்று சடங்கு சம்பிரதாயங்களில் வாழ்க்கை நடத்தும் ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரால் பரப்பி விடப்பட்ட புழுகுகளே காரணம்.


பழங்காலத்தில் பதிவுத் திருமணங்கள் அரசமமைப்புச் சட்டங்களில் (மன்னர் காலத்து) இல்லாததால் (ஆண் சமூகம் பெண்னை அடக்கி வைக்க நினைத்த மற்றொரு காரனத்தினாலும்) தாங்கள் திருமணமானவர்கள் என்பதை அவர்கள் சார்ந்த சமூகம் தெரிந்து கொள்ள அணியப்பட்ட இரு அடையாளச் சின்னங்களே தாலி மற்றும் மிஞ்சி.


என்னைப் பொறுத்த வரையில் இன்னும் நூறு ஆண்டுகளில் திருமணம் என்கின்ற அமைப்பு வெறும் பதிவுத்திருமணங்களாகவே இருக்கும். எதிர்கால விரைவு வாழ்க்கையில் யாருக்கும் இன்றைக்கு இருக்கும் நேர அவகாசமோ, சொந்த பந்தங்களில் பினைப்போ இருப்பதற்கு வாய்ப்புகள் குரைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழல் அமைகிற போது திருமணம் என்பது வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.


போன நூற்றாண்டுகளில் திருமணங்கள் மாதக் கணக்கிலும், பிறகு வாரக்கணக்கிலுமாக மாறி இந்த நூற்றாண்டில் ஒரு சிலமணி நேரங்களுக்குள் சுருங்கி விட்டது. அடுத்த நூற்றாண்டில் பதிவுத் திருமணங்கள் கூட அரசாங்கத்தின் கட்டாயத்தால் ஒரு கடமையாகவே நடக்கும் சாத்தியம் உள்ளது.


*******


திருமணங்களை நடத்தி வைக்கும் பிராமனர்கள், சிவாச்சாரிகள் கூட பழைய முறைப்படி தான் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் அத்தகைய திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம் என்று சொல்லுவதில்லை. காரணம் சடங்குகளையும் அதில் கூறப்படும் புனிதங்களையும் யாரும் ஏற்பதற்கில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதாலும், யார் எப்படிப் போனாலும் தனக்கு ஜீவனம் நடத்த வருமானம் கிடைப்பதாலும் இவர்கள் பழைய முறப்படி திருமணங்கள் நடத்த வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.


பெரும்பாலான சாதியினர் சடங்குகளை, எங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்பார்கள். மற்றொரு காரணம் சடங்குகளைப் பழித்தால் பாவம் வந்து சேரும் என்று சடங்குகளுக்கு புனிதம் கற்பிக்கப்பட்டிருப்பதுமே காரணம். இப்படித்தான் சடங்குகளின் வழி தாலிக்கும் புனிதம் கற்பிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதைத் தவிர்த்து தாலி புனிதம் என்பதெல்லாம் வெறும் புரட்டுகளே. அடிப்படையாகப் பார்த்தால் தாலி பெண்ணிற்கு பதுகாப்பு என்பதை விட பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் சூழ்ச்சி என்பது தான் உண்மை.


இம்முனையில் நான் எதிர் முனையில் யார்?

செல்போனில் பேச சிலரைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு அது பிடித்தமான விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு செல்போனில் பேசும் நாகரீகம் தெரிந்து வைத்து இருக்கிறோம். இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை பேர் வெறும் காலுடன் செருப்பு இல்லாமல் திரிகிறார்களோ, அந்த அளவே செல்போன் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட செல்போனில் பேசும் நாகரீகம் பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் அழைக்கும் நபர் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தாலோ அவருக்கு அழைப்பு விடுக்கும் முன், குறுந்தகவலின் வழி அவரது அனுமதியை பெற்று பேசுவது நல்லது. மேலும் எதிர்முனையில் இருப்பவர் பரபரப்பாகவோ அல்லது அவசரமான நிலையில் இருக்கிறாரா என்பதை உணர்ந்து அவரின் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தை மட்டும் பேசி வைக்கவும்.

ஒருவருக்கு அழைப்பு விடுக்கையில் அழைப்பு மணி முழுவதுமாக அழைத்து ஓயும் வரை அழைப்பை நிறுத்தக்கூடாது. நீங்கள் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் உங்கள் அழைப்பை துண்டித்து பிறகு மீண்டும் அவரே உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு தடவை அழைப்புமணிச்சத்தம் உங்களுக்கு கேட்டவுடன் உங்களது அழைப்பை நீங்கள் துண்டித்தால் எதிர்முனையில் இருப்பவர் அதை உணரமுடியாமல் அல்லது கேட்கமுடியாமல் போகக்கூடும். பிறகு அவர் உங்களை தொடர்பு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று புகார் கூறுவது தவறு.

நீங்கள் அழைக்கும் நபர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், அவருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், உங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எதிர் முனையில் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு வேண்டியவர் தானே என்று ஒருமையில் பேசி அவருடைய அப்பாவிடமோ அல்லது வேறு யாரிடமாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அவலம் ஏற்பட வாய்ப்புண்டு.

அவசரமான அல்லது முக்கியமான தகவல் பரிமாரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு அலுவல் நேரங்களில் அழைப்பு விடுக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அவர்களது அனுமதி இன்றி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவரின் சூழ்நிலை தெரியாமல் பேசுவதும் தவறு. அவருக்கு நீங்கள் வேண்டியவர் என்பதற்காகவே உங்கள் பேச்சை அவர் தட்ட முடியாமல் கேட்க நேரிட்டு அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.

பொது இடங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குறியவரிடமோ அல்லது வேறுயாரிடனும் பேச நேரிட்டால், அது பக்கத்தில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத விதமாக அமைதியாய் பேசுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் உரக்கப்பேசினால் நீங்கள் பேசும் விசயம் மற்றவருக்குத் தெரிவதோடு இல்லாமல், மற்றவரின் பார்வையில் நீங்கள் வேசம் கட்டாத கோமாளியாகத் தெரிவீர்கள்.

மீட்டிங் அறையில் இருக்கும் போது அழைப்பு வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு தனியாக சென்று பேசுவது நல்லது.


என் அனுபவத்தில் சில முதலாளிகள் தன்னுடைய தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது ஒருவகையான கொளரவ குறைச்சலாக நினைப்பதே அதற்குக் காரணம். இது முற்றிலும் தவறு, யாராக இருந்தாலும் முதலில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசுவதே பண்பாகும். அறிமுகம் செய்துகொள்வதால் நாம் ஒன்னும் குறைந்துபோவதில்லை.


வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் வேண்டியவருக்கு அவர் இருக்கும் நாட்டின் நேர வித்தியாசம் தெரிந்து அழைப்பது நல்லது. பெரும்பாலும் அவசியம் ஏற்படாதவரை ஒன்பது மணிக்கு மேல் யாரையும் தொடர்பு கொள்ளாது இருத்தலே உத்தமம்.

பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது போனை ஆப் செய்துவிடுவது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சிறந்தது.
செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை கண்டால் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அலட்சியம் சிலரது உயிரை பலி வாங்கிவிடும்.

உங்களது போனுக்கு wrong calls வந்தால், எதிர் முனையில் இருப்பவருக்கு இது நீங்கள் அழைத்த எண் இல்லை என்பதை நாகரீகமான முறையில் தெரியப்படுத்துங்கள், அழைத்தவர் பண்பாளராக இருந்தால் நிச்சயம் மண்ணிப்புக் கேட்பார். அப்படி வரும் அழைப்புகள் தவறுதலாகவோ அல்லது தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம், மேலும் இது போன்று ஒரு சூழ்நிலை நமக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நாகரீகமாக அப்படி வரும் wrong calls க்கு பதிலளிப்பது நல்லது.


செல்போனில் நீங்கள் ஒருவருக்கு ஒருமுறைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர் உங்களின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் கோவம் கொள்ளாமல் பொறுமை காப்பது அவசியம். ஏனெனில் அவர் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத ஏதொ ஒரு சிக்களான சூழலில் இருக்கலாம்.(உதரணமாக மருத்துவமனையிலோ, வாகனத்தில் போய் கொண்டோ அல்லது முக்கியமான மீட்டிங்கிலோ இருந்திருக்கலாம்) அதனால் பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்றால் குறுந்தகவல் வழி அவர் ஓய்வாக இருக்கும் போது உங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.


std booth ல் பேசுபவர்கள் அதிகபசமாக அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிக std booth வசதி இல்லாத ஊர்களில் நீங்கள் உங்களிடம் நேரமும் பணமும் இருக்கிறது என்பதற்காக மணிக்கனக்காக பேசும் பொழுது நீங்கள் ஒன்றை மறக்குறீர்கள். அவசர செய்தியை சொல்வதற்காக யாரோ ஒருவர் நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம், அப்படி ஒரு நிலைமை நமக்கும் நேரும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டிய விசயத்தை பேசி மற்றவருக்கு வழி விடுவது நல்லது.

  1. பொது தொலைபேசியில் பேசும் பொழுது
  2. அமைதியாகப் பேசுங்கள்
  3. தெளிவாகப் பேசுங்கள்
  4. நாகரீகமாகப் பேசுங்கள்
  5. போனை மென்மையாக கையாளுங்கள்
  6. விசயத்தை மட்டும் பேசுங்கள்
  7. தன்மையோடு பேசுங்கள்


cross talk வந்தால் தயவு செய்து அதை தொடர்ந்து கேட்காமல் துண்டித்துவிடுங்கள். பிறரது பேச்சை ஒட்டுக் கேட்பது மிக மிக கேவலமான செயல்.

இன்னும் தெரிந்து கொள்வோம்.

ஹலோ யார் பேசுறது

செல்போனில் பேச சிலரைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு அது பிடித்தமான விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு செல்போனில் பேசும் நாகரீகம் தெரிந்து வைத்து இருக்கிறோம். இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை பேர் வெறும் காலுடன் செருப்பு இல்லாமல் திரிகிறார்களோ, அந்த அளவே செல்போன் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருத்தரின் வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட செல்போனில் பேசும் நாகரீகம் பற்றி தெரிந்து கொள்வோம்.



நீங்கள் அழைக்கும் நபர் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தாலோ அவருக்கு அழைப்பு விடுக்கும் முன், குறுந்தகவலின் வழி அவரது அனுமதியை பெற்று பேசுவது நல்லது. மேலும் எதிர்முனையில் இருப்பவர் பரபரப்பாகவோ அல்லது அவசரமான நிலையில் இருக்கிறாரா என்பதை உணர்ந்து அவரின் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தை மட்டும் பேசி வைக்கவும்.



ஒருவருக்கு அழைப்பு விடுக்கையில் அழைப்பு மணி முழுவதுமாக அழைத்து ஓயும் வரை அழைப்பை நிறுத்தக்கூடாது. நீங்கள் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவருக்கு தெரிந்திருந்தால் அவர் நிச்சயம் உங்கள் அழைப்பை துண்டித்து பிறகு மீண்டும் அவரே உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் மிஸ்டு கால் கொடுக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு தடவை அழைப்புமணிச்சத்தம் உங்களுக்கு கேட்டவுடன் உங்களது அழைப்பை நீங்கள் துண்டித்தால் எதிர்முனையில் இருப்பவர் அதை உணரமுடியாமல் அல்லது கேட்கமுடியாமல் போகக்கூடும். பிறகு அவர் உங்களை தொடர்பு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று புகார் கூறுவது தவறு.



நீங்கள் அழைக்கும் நபர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், அவருக்கு நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், உங்கள் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் எதிர் முனையில் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு வேண்டியவர் தானே என்று ஒருமையில் பேசி அவருடைய அப்பவிடமோ அல்லது வேறு யாரிடமாவது சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் அவலம் ஏற்பட வாய்ப்புண்டு.



அவசரமான அல்லது முக்கியமான தகவல் பரிமாரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு அலுவல் நேரங்களில் அழைப்பு விடுக்க வேண்டும்.நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அவர்களது அனுமதி இன்றி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவரின் சூழ்நிலை தெரியாமல் பேசுவதும் தவறு. அவருக்கு நீங்கள் வேண்டியவர் என்பதற்காகவே உங்கள் பேச்சை அவர் தட்ட முடியாமல் கேட்க நேரிட்டு அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்காதீர்கள்.



பொது இடங்களில் நீங்கள் உங்கள் அன்புக்குறியவரிடமோ அல்லது வேறுயாரிடனும் பேச நேரிட்டால், அது பக்கத்தில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத விதமாக அமைதியாய் பேசுங்கள். அப்படி இல்லாமல் நீங்கள் உரக்கப்பேசினால் நீங்கள் பேசும் விசயம் மற்றவருக்குத் தெரிவதோடு இல்லாமல், மற்றவரின் பார்வையில் நீங்கள் வேசம் கட்டாத கோமாளியாகத் தெரிவீர்கள்.



மீட்டிங் அறையில் இருக்கும் போது அழைப்பு வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லி விட்டு தனியாக சென்று பேசுவது நல்லது.


என் அனுபவத்தில் சில முதலாளிகள் தன்னுடைய தொழிலாளிக்கு தொலைபேசியில் அழைத்தால் அவர் தன்னை அறிமுகம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது ஒருவகையான கொளரவ குறைச்சலாக நினைப்பதே அதற்குக் காரணம். இது முற்றிலும் தவறு, யாராக இருந்தாலும் முதலில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசுவதே பண்பாகும். அறிமுகம் செய்துகொள்வதால் நாம் ஒன்னும் குறைந்துபோவதில்லை

வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் வேண்டியவருக்கு அவர் இருக்கும் நாட்டின் நேரம் வித்தியாசம் தெரிந்து அழைப்பது நல்லது. பெரும்பாலும் அவசியம் ஏற்படாதவரை ஒன்பது மணிக்கு மேல் யாரையும் தொடர்பு கொள்ளாது இருத்தலே உத்தமம்.

பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது போனை ஆப் செய்துவிடுவது அல்லது சைலண்ட் மோடில் வைப்பது சிறந்தது.

செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை கண்டால் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்.

உங்களது போனுக்கு wrong calls வந்தால், எதிர் முனையில் இருப்பவருக்கு இது நீங்கள் அழைத்த எண் இல்லை என்பதை நாகரீகமான முறையில் தெரியப்படுத்துங்கள், அழைத்தவர் பண்பாளராக இருந்தால் நிச்சயம் மண்ணிப்புக் கேட்பார். அப்படி வரும் அழைப்புகள் தவறுதலாகவோ அல்லது தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம், மேலும் இது போன்று ஒரு சூழ்நிலை நமக்கும் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நாகரீகமாக அப்படி வரும் wrong calls க்கு பதிலளிப்பது நல்லது.

செல்போனில் நீங்கள் ஒருவருக்கு ஒருமுறைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் உங்களின் அழைப்பை ஏற்கவில்லை என்றால் கோவம் கொள்ளாமல் பொறுமை காபது அவசியம். ஏனெனில் அவர் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத ஏதொ ஒரு சிக்களான சூழலில் இருக்கலாம்.(உதரணமாக மருத்துவமனையிலோ, வாகனத்தில் போய் கொண்டோ அல்லது முக்கியமான மீட்டிங்கிலோ இருந்திருக்கலாம்) அதனால் பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்றால் குறுந்தகவல் வழி அவர் ஓய்வாக போது உங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்.

std booth ல் பேசுபவர்கள் அதிகபசமாக அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

std booth வசதி இல்லாத ஊர்களில் நீங்கள் உங்களிடம் நேரமும் பணமும் இருக்கிறது என்பதற்காக மணிக்கனக்காக பேசும் பொழுது நீங்கள் ஒன்றை மறக்குறீர்கள். அவசர செய்தியை சொல்வதற்காக யாரோ ஒருவர் நீங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்கலாம், அப்படி ஒரு நிலைமை நமக்கும் நேரும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டிய விசயத்தை பேசி மற்றவருக்கு வழி விடுவது நல்லது.

பொது தொலைபேசியில் பேசும் பொழுது

  1. அமைதியாகப் பேசுங்கள்
  2. தெளிவாகப் பேசுங்கள்
  3. நாகரீகமாகப் பேசுங்கள்
  4. போனை மென்மையாக கையாளுங்கள்
  5. விசயத்தை மட்டும் பேசுங்கள்
  6. தன்மையோடு பேசுங்கள்

cross talk வந்தால் தயவு செய்து அதை தொடர்ந்து கேட்காமல் துண்டித்துவிடுங்கள். பிறரது பேச்சை ஒட்டுக் கேட்பது மிக மிக கேவலமான செயல்.

இன்னும் தெரிந்து கொள்வோம்.


அத்தனைக்கும் ஆசைப்படுவோம்

ஆசை தான் இவ்வுலக உயிரினங்கள் இயங்குவதற்கு மூல காரணமே. முக்கியமாக மனித வளர்ச்சிக்கு ஆசையே மிக இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட ஆசையை விட்டு விட்டால் தான் மனிதனால் நிம்மதியாக வாழ முடியும் என்று பல விதமான போதனைகள் சொல்லிவந்திருக்கிறார்கள்.

இங்கே நான் கொஞ்சம் முரன்படுகிறேன்.

ஆசைப்படுவதை விட்டு விட ஆசைப்படுவதென்பது எப்பொழுதும் நிறைவேறாத ஆசையாகவே தான் இருக்கும். ஆசை இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் வளரனும்கிற நோக்கம், வாழனும்கிற நோக்கம் வருகிறது. பறக்க வேண்டும் என்று மனிதன் ஆசை பட்டதாலேயே அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டது. இறைவனை காண வேண்டும் என்ற ஆசை இருப்பதாலேயே ஆண்மீகம் வளர்ச்சி கண்டது. ஆசை என்பது இல்லை என்றால் உயிரினங்களின் இயக்கம் நின்று போயிருக்கும்.

வாழ்க்கையில் துன்பம் ஆசைப்படுவதால் வருகிறது, அதுனாலயே ஆசைப்படுவதை விட்டு விடுங்கள் என்று சொன்னதன் நோக்கம் சற்று உற்று ஆராய்ந்து பார்த்தோமானால், ஆசையின் நோக்கம் மனதிற்கு மகிழ்ச்சி கொண்டுவருவதே, ஆனால் நாம் நம் மனதின் மகிழ்ச்சிக்கான தூண்டுதலை நாம் நமக்குள்ளேயே தேடாமல், அது வெளிச்சூழ்நிலை கொண்டு தீர்மானிக்கும் வகையில் நாம் நம் ஆசையை வளர்த்துக் கொண்டதாலேயே பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதில்லை.

எப்பொழுது மனதிற்கு ஆசையினால் கஷ்டம் வருகிறது என்று யோசித்தால், நமது ஆசை பொருள் நோக்கத்தில் போகும் பொழுது தான். ஏனெனில் பொருள் நோக்கத்தில் ஆசை போகும் பட்சத்தில் அது நிறைவேறுவதற்கான சாத்தியம் கிடையாது.

எப்படி?

உங்கள் அண்டைவீட்டுக்காரர் மாதம் லகரம் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரைவிட ஒரு ரூபாய் அதிகம் சம்பளமாக
வாங்கினால் தான் மகிழ்ச்சி, அவர் ஆசையை பூர்த்தி செய்வதில் தான் உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்குவோம். நீங்கள் பொருள் ஈட்டுவதில் அவரை விட பின்தங்கிப்போனால் நீங்கள் தொன்னூறு ஆயிரம் சம்பாதித்தும் மகிழ்ச்சி இருக்காது, மாறாக மனதுக்கு வருத்தம் தான் வரும்.

சரி, அவரை விட உங்கள் மனைவி ஆசைப்பட்டதுபோல சம்பாதிதுவிட்டால் உங்கள் இருவரின் ஆசையும் முற்றுப் பெற்றுவிட்டதா என்றால் இல்லை, அது அடுத்த நிலைக்கு தாவிவிடுகிறது. இப்படி பொருள் நோக்கத்தில் வருகிற ஆசை முழுமை பெறுவதில்லை.ஆசையின் நோக்கம் என்பது விரிவடைய வேண்டும் என்பதே. எது ஒன்றை ஆசைக்கு எல்லை என்று வகுக்கிறோமோ அதை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்பதே ஆசையின் இயல்பு.

உங்கள் ஆசை அல்லது தேடல் என்பது பணமாக இருக்கட்டும், பொருளாக இருக்கட்டும், புகழாக இருக்கட்டும், கடவுளை காண்பதாக இருக்கட்டும் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் அடிப்படையாகப் பார்த்தால் உங்களது ஆசை என்பது சந்தோஷத்தின் தேடலில் தான் இருக்கிறது.
மனம் ஆசையை உருவாக்குகிறது. அந்த ஆசை நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சிப் படுவதும், நிறைவேறாவிட்டால் துக்கப்படுவதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் அதை ஒரு பெரிய தோல்வியாக, ஏமாற்றமாக, இழப்பாக, வேதனையாக எடுத்துக்கொள்ளாமல் எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போமேயானால், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பார்க்கும் மனநிலை, மனோபாவம் நம்மிடம் இருக்குமேயானால், ஆசைப் படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை, ஆசையை விட்டு விட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எது உங்கள் மனதுக்கு பெரிய ஆசை என்று படுகிறதோ அதையே நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

அதனால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள், உங்கள் ஆசை என்பது உங்கள் மகிழ்ச்சி சார்ந்ததாக இல்லாமல் மற்றவருக்கும் அது மகிழ்ச்சி தரும் பட்சத்தில் உங்களது எந்த ஆசையும் ஞாயமானதே என்பதே என் கருத்து.

இப்படியும் சில மனிதர்கள்

நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம்.

அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது.

ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுதினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்த போது அவர் மடியில் படுத்திருந்த இரண்டு வயது குழந்தை வாயில் நுரைதல்ல பேச்சு மூச்சற்று கிடந்தது. அந்தத் தாய் செய்வதறியாது கண்களில் இருந்து கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட அழுதுகொண்டே பேருந்திலிருந்தவர்களைப் பார்த்து எம்புள்ளையக் காப்பாத்துங்க என்று புழம்பிக்கொண்டே இருந்தார்.

நடத்துநர் மற்றும் பயணிகளில் மூத்தவர்கள் சில உத்தியோகஸ்தர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்லிகொண்டே இருந்தார்களே தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்த பாட்டைக்காணோம். நான் நடத்துநரிடம் (ஓட்டுனரை விட நடத்துனர் மூத்தவர் என்பதால்) சார் பக்கத்தில துவறங்குறிச்சிய விட்டா பெரிய ஊர் எதுவும் கிடையாது, வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தான் துவறங்குறிசியிலிருந்து வந்து இருக்கோம். அதுனால இந்த குழந்தைய எதாவது ஒரு மருத்துவமனயில சேர்த்திடலாம் வண்டிய திருப்பச் சொல்லுங்க என்றேன்.

இல்ல இல்ல நாங்க அவசரமா போய்கொண்டிருக்கிறோம் அதுனால துவரங்குறிச்சி நோக்கி செல்லும் பேருந்து எதிர் திசையில் வருகிறதா வென்று பார்த்து அந்தப் பெண்ணை ஏறிப்போகச் சொல்லுங்க என்று பெரும்பாலனவர்களிடமிருந்து பதில் வந்தது. அப்பொழுது அந்தப் பெண் (அதிகம் படித்த பெண் இல்லை என்று அவருடைய பேச்சிலே தெரிந்தது) நடந்து கொண்டவிதம் என்னையும், என் நண்பனையும் இன்னும் சிலரை கலங்க வைத்தது. கையில் பத்து ரூபாய் தவிர வேறு பணம் எதும் இல்லை யாராவது கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்று வெடித்து அழுதார்.

அதற்குள் ஓட்டுநர் எதிர் திசையில் துவறங்குறிச்சி செல்லும் பேருந்து வருது இறங்கிப் போய் ஏறுமான்னு சொல்லி அந்தப்பெண்ணை இறக்கிவிட அந்தப் பெண் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல அந்த வண்டி நோக்கிப் போகையில் யாராவது வந்து உதவ மாட்டார்களா என்பது அவரது பார்வையிலும், அழுகையிலும் தெரிந்தது. அந்தப் பார்வை என்னையும் என் நண்பனையும் அழுத்த நாங்கள் இருவரும் ஒடிச் சென்று அந்தப் பெண்ணோடு ஏறிக்கொண்டோம், எங்களோடு திருச்சி நோக்கிப் பயனித்தவர்கள் தம்பி நீங்க வாங்க வண்டி உங்களுக்காக நீங்க திரும்புகிறவரை இங்க நிக்காது என்று சொல்லி அழைத்தார்கள்.

நாங்கள் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அந்தப் பெண்ணோடு புறப்பட்டோம். எங்களுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயற்சித்தோம். அழுகையும் புழம்பலும் நின்ற பாடில்லை. ஒட்டுநர் வண்டியை விரைவாகச் செலுத்தி துவறங்குறிச்சியில் இறக்கி விட்டார். அங்கிருந்து ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்றடைந்தோம். விவரம் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் வாடகை வாங்க மறுத்தார்(நல்லவர்). குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையை அட்மிட் செய்துவிடும்படி கூற, என் நண்பன் சிறிதும் யோசிக்காமல் ஒரு ஐநூறு ரூபாய் பணம் (கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகை அது) எடுத்து அந்தப் பெண்ணிற்காக கவுண்டரில் பணம் கட்டச் சென்றான்.

நான் அந்தப் பெண்ணின் திருச்சி வீட்டு முகவரி வாங்கி கொண்டு அவர்கள் வீட்டில் தகவல் சேர்த்து விடுவதாக சொல்லி நானும் என் நண்பனும் கிளம்பினோம்.

திருச்சியில் எங்கள் கல்லூரிக்கு அருகாமையிலேயே அவர்கள் வீடு இருந்ததால் அவர்களிடம் விவரத்தை சொல்லி கல்லூரிகுச் சென்றோம். அவர்களும் எங்களது பெயர் கல்லூரி மற்றும் வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அவசரமாக கிளம்பினார்கள்.

மறுநாள் காலை என்னையும் என் நண்பனையும் சிலர் பார்க்க வந்திருப்பதாக பிரின்சிபால் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அதற்குள் பிரின்சிபால் அவர்களை அழைத்துக்கொண்டு எங்களைத்தேடி வகுப்பறைக்கே வந்து விட்டார். வந்தவர்கள் அந்தப் பெண்ணும் அவரது கணவரும், எங்களைப் பார்த்ததும் கட்டி அழுது சொன்னார்கள் நீங்க இல்லைனா எங்க புள்ள பிழைச்சிருக்காது,எங்களை பொறுத்தவரை நீங்க தான் தம்பி தெய்வம்னு என் நண்பனை அந்தப்பெண் சொன்ன பொது. தொண்டை கணத்து அனைவருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, அந்த வாரம் விடுப்பில் ஊர் திரும்ப திருச்சியில் பேருந்து எடுத்தோம். பார்த்தால் எங்களையும் அந்தப் பெண்ணையும் நடுவழியில் விட்டுச் சென்ற அதே பேருந்து, ஓட்டுனரும், நடத்துனரும் அவர்களேதான். எங்களை அடையாளம் கண்டு நடத்துநர் கேட்டார் அந்தப் புள்ள பிழச்சிருச்சானு. நாங்கள் ஆமாம் என்றோம்.

அதற்கு அவர் சொன்ன வார்த்தை தான் எங்களை ரொம்ப மணம் நோக வைத்தது. நாங்க தான் சொன்னோம்ல அதுக்கு ஒன்னுமில்லை பிழைசுக்கிடும்னு, நீங்க தான் வயசுக்கோளாறுல அந்தப் பொம்பளப்புள்ளயப் பார்த்ததும் படத்துல் வற்ற ஹீரோ மாதிரி இறங்கிப்போனீங்க என்றார்.

சரி சரி வண்டிகிளம்பும்போது ஏறிக்கிங்க மதுரை மட்டும் தான் சிட்டிங் மத்த ஊரல்லாம் வண்டி கிளம்பும்போது இடம் இருந்தா மட்டும் தான் உட்காரலம்னு சொல்லிக்கொண்டு போனார்.

எப்படி பட்ட உலகத்தில் இருகிறோம் என்று புரிந்தது எங்களுக்கு. கருணையோடு நடந்தால் கூட அதையும் கொச்சைப்படுத்த இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் என்று.

கோவில் சடங்குகளும், சில சங்கடங்களும்.



எங்க ஊர் எல்லையில் எங்க சாதி அமைப்பு வழிபாட்டு முறைக்காக கட்டப்பட்டது தான்(பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை) அய்யனார் கோவில். (எங்கள் சாதி மட்டுமல்லாது எங்கள் சாமியை குலதெய்வமாக வழிபடும் மற்ற சாதிப்பிரிவினரும் வந்து வழிபடுவதற்காக கட்டப்பட்டது)


பிறகு ஊர்க்காரர்கள் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்) அந்தக் கோவில் பராமரிப்புக்காகவும், சாமிக்கு பூசைகள் தொடர்ந்து செய்வதற்காகவும் சில சட்டங்களை ஏற்படுத்தினர். அதாவது அந்தக் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்தவருக்கு, கோவிலில் வரும் வருமானத்திலிருந்து (உண்டியலில் சேரும் தொகை தவிர்த்து) எங்கள் ஊரில் (எங்கள் சாதி அமைப்பினர் மட்டும்)எத்தனை தலைக்கட்டு இருக்கிறதோ அத்தனை பங்காகப் பிரித்து அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கை, நிதி அதிகமாக கொடுத்த குடும்பத்திற்கு குடுத்து விடுவது என்றும், அந்தக் குடும்ப உறுப்பினர்களே அதிகப்படியான நாட்களில் சாமிக்கு பூசை (கோவில் முறை) வைப்பது என்றும் வகுத்துக் கொண்டார்கள்.


மற்ற குடும்பத்தார்கள் பிரிதொறு நாட்களில் சாமிக்கு பூசை(கோவில் முறை) வைப்பது வழக்கம். இது நடப்புத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறைவரை சரிவர அந்த அந்த காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டாரும் அவரவர் முறை வருகிற பொழுதும் தவறாமல் கடைபிடித்தனர். காரணம் போன தலைமுறைவரை எங்கள் ஊரில் யாரும் ஒரு பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள சொந்த மற்றும் கோவிலிக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர். மேலும் போன தலைமுறைகள் வரை ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் இருந்தனர். அதனால் கோவில் முறை வருகிறபோது குடும்பத்தில் ஆண்கள் யாராவது ஒருத்தர்(மற்றவர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று இருந்தால் ) அந்த வேலையை (சாமிக்கு செய்யும் பூசையை) செய்து விடுவார்கள்.


ஆனால் இன்றைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்று வந்து விட்டது. மேலும் படிப்பறிவு வளர்ந்து விட்டதாலும் விவசாயத்தில் ஆதாயம் குறைந்து விட்ட நிலையிலும், வருமானத்திற்காகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், வேலையின் காரணமாக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் நிலைக்கு பெரும்பாலான குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் சாமிக்கு பூசை வைக்கும் முறை வருகிறபோது செய்வதறியாது தவிக்கின்றனர்.



சாமிக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்கின்ற பயம் ஒருபக்கம் இருக்க, அதை விட ஊராரின் மிரட்டல்களுக்குதான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதாவது கோவில் முறை வைக்க தவறினாலோ அல்லது வைக்க நாங்கள் விரும்பவில்லை என்று ஒதுங்கினாலோ, சொந்த ஊருக்கும் உங்களுக்கும் இனி எந்த (சம்)பந்தமும் இல்லை என்று எழுதிகுடுத்து விடவேண்டும் என்று ஊரில் ஒரு சட்டம் இருக்கிறதுக்குப் பயந்து, இன்னைக்கு இருக்கும் அவசர யுகத்தில் தனக்கு என்னைக்கு சாமிக்கு பூசை வைக்கும் முறை வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அந்த நாட்களில் ஊரில் இருக்கும் வசதி குறைந்த பங்காளி குடும்பங்களுக்கு அதிகத்தொகை கொடுத்து சாமிப் பூசைகளை செய்வதென்பது அந்தக் குடும்பங்களுக்கு பெரிய சிரமமாக உள்ளது.



வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சடங்குகள் சிரமத்தை குடுக்கிறது. அதனால் சாமிக்கு பூசை வைக்கும் முறையை யாராவது ஒருவரிடம் மாதச் சம்பளமாக அவர் கேட்கும் தொகையை குடுத்துப் பார்க்கச் சொல்லலாம், என்றால் கோவிலில் கிடைக்கும் பெரிய வருமானத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால் இந்தச் சிரமங்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் எங்க ஊர் (சாதி)காரர்களுக்கு இன்றளவும் சிரமமாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து: காலம்காலமாக கடவுளை நம்பவில்லையென்றாலோ அல்லது கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசினாலோ, நரகத்திற்குப் போவார்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை பயமுறுத்தி வந்ததால் இன்றளவும் மனிதன் கடவுள் நம்பிக்கை சரிதானா? சடங்குகள் சரிதானா? என்பதை ஆராய்வதற்குக்கூட பயப்படுமளவுக்கு அவன் மனதில் கடவுள் பற்றிய பயம் மேலோங்கிவிட்டது.

மேலும் கோவில்கள், கடவுள்கள் என்பது மனிதனை பதுகாப்பதற்காக (வெறும் நம்பிக்கை அளவிலே) உருவாக்கப்பட்டதே. தவிர மனிதன் கடவுளை காப்பதாகவோ, கடவுள் நம்பிக்கை மனிதனை முடக்குவதாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.



மனித நேயமும் ஆத்திகனும்



கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.



ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.


பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.


அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.


உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.


” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.


மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.

அவளும் நானும்





(வார்த்தை கடனாகபெற
விருப்பமில்லை
மூளை செலவு செய்ததில்
கிடைத்த துளிகள் கொண்டு
ஒரு கோப்பை
நிறைக்க முயற்சிக்கிறேன்)

அதுவரை அவளிடம் நானும்
என்னிடம் அவளும் பழகியதில்லை
அவளை அறிந்து கொள்ள
முயன்ற போதெல்லாம்
என்னை அறிந்தவள்
போல் இருந்தாள்

அவளிடம் பேச முயன்ற போதெல்லாம்
அவள் என்னிடம் பேசிவிட்டதுபோல் இருந்தால்
நான் ஆரம்பிப்பது போலதோன்ற
அவள் முடிந்தது போல இருந்தாள்
அருகருகே இருக்கிறாம்
ஆரம்பம் முடிவாக

கருத்துக்கள் அடிப்படையில் வரும் உறவு எப்படிப்பட்டது

கருத்தின் அடிப்படையில் நாம் மற்றவர்களுடன் உறவை உருவாக்கிக்கொள்ளும் போது, அங்கு உறவைவிட கருத்தை நிறைவேற்றுவதுதான் முக்கியமானதாகப் போய்விடுகிறது.

தெரிந்தவற்றின்(known) அடிப்படையில்தான் நம் மனம் இயங்கி வருகிறது. மனம் தனக்குத் தெரிந்தவற்றிலிருந்து கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறது. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அங்கு மனம் முக்கியமான பங்கை வகிக்க ஆரம்பிக்கிறது.

கருத்துக்களை எப்படி நிறைவேற்றுவது என்ற வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நம் மனம் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது. அப்போது உறவு புறக்கனிக்கப்படுகிறது.

நான் இந்து, நான் இந்தியன், நான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் போன்றவைகள் நமக்கு நன்கு தெரிந்தவைகள். மதம், நாடு, கட்சி ஆகியவர்றை பற்றி பல ஆழமான கருத்துக்களை இவைகள் உண்டாக்கிவிடுகின்றன. இந்தக் கருத்துக்களின் காரணமாக நாம் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடமும், வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும், வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றி வருபவர்களிடமும் நாம் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. மாறாக அவர்களை நாம் விரோதிகளாகவே பார்க்கிறோம். அவர்களை அழிக்க முற்படுகிறோம்.

நமக்குத் தெரிந்தவைகள் நம்மை முற்றிலும் கட்டுப்படுத்தி, நம்மை தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன.தெரிந்தவற்றின் அடிப்படையில் இயங்கிவரும் மனம், பாதுகாப்பு,, இன்பம், புகழ், ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை விரும்பி அவற்றை அடையும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

கருத்துக்களின் அடிப்படையில் உருவாகும் உறவு போட்டி, பகை, சண்டைகள், பிரிவினை, பொறாமை போன்றவற்றை தான் உருவாக்கும்.

போட்டியாளன் எதிரியா?

எல்லோருக்கும் வரக்கூடிய குழப்பம். ஒன்றும் தெரியாதவன் போல் நம் அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆசாமி, நம் போட்டியாளனா? இல்லை நம் எதிரியா? என்பது தான்.


யார் நண்பன்? யார் எதிரி?


நீ முந்தி, நான் முந்தி என வணிகரீதியாக சண்டையிடும் இரு பெரிய நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளரா? இல்லை எதிரியாளரா?


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் போட்டியாளன் வேறு!, எதிரி வேறு!


போட்டியாளனுக்கும், எதிரிக்கும் நூலளவு தான் இடைவெளி. உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை நிர்மூலமாக்கிய கோக் நிறுவனம் உள்ளூர் நிறுவனத்துக்கு எதிரியே. ஆனால், உலக விற்பனையில் 38% பங்கை வைத்திருக்கும் பெப்சி, கொக்ககோலாவின் தகுதியுள்ள போட்டியாளனே.

சேதுசமுத்திரத் திட்டத்தை கொண்டு வர எதிர்க்கும் எந்த ஒரு எதிர் கட்சியும் ஆளும் கட்சிக்கு எதிரியே!. ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எல்லா போட்டியாளரும் எதிரிகள் அல்ல.


அப்பொழுது யார் நம் எதிரி?


நாம் இன்னொருவர் தொழிலை முழுமையாக அழிக்க நினைக்கும் போது தான் போட்டியாளன் எதிரியாகிறான். போட்டியாளன் போட்டியில் பின் தங்கிப்போனால், அவனுடைய குறிக்கோள் அவனின் சுய முன்னேற்றமாக இருக்காது, மாறாக நம்மை அழிப்பதாகவே இருக்கும்.(போட்டியாளனாக படுக்கைக்குப் போனவன் விழிக்கையில் எதிரியாகத் தான் கண் விழிப்பான்)


போட்டியாளன் என்பவர் ரேஸில் ஓடிக்கொண்டிருப்பவர், என்றாவது ஒருநாள் அவர் உங்களை, அல்லது நீங்கள் அவரை வெல்ல வேண்டும்.


அடிக்கோடிட்டுப் படியுங்கள்!!


வெல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதல்ல போட்டியாளரின் நோக்கம். போட்டியாரை அழிக்க நினைப்பது முட்டாள் தனம். போட்டியாளர்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள், அவர்களை அழிக்க நினைக்கும் நேரத்தில் நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்.

ஓட்டப்பந்தயத்தில் நம்மை தள்ளிவிட்டு ஜெயிக்க நினைப்பவன் நம் எதிரி, நம்மை விட வேகம் கூட்டி நம்மை முந்த நினைப்பவன் போட்டியாளன். நமக்கே தெரியாமல் நம்மை வளர்ப்பவன் நம் போட்டியாளன்!. போட்டியாளன் பலத்தை குறைத்தால் நீங்கள் அசுர பலம் பெற்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். அவன் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் போது நீங்கள் உங்கள் பலத்தை அதிகமாக்கிக் கொள்கிற வாய்ப்பை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.

போட்டி இல்லாத உலகம் சோம்பலை வாசல் தெளித்து வரவேற்கும். இவ்வுலகில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற மமதையை ஏற்படுத்தும். போட்டியில்லாத வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக மாறிவிடுவீர்கள்.

எட்டடி பாய்ந்த நீங்கள் போட்டியாளன் பத்தடி பாய்வதை தடுத்தால் பிறகு நீங்கள் பதினாறு அடி பாய்கிற சூழல் வாய்க்காமலேயேப் போய்விடும். பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்து டாடா மற்றும் மஹெந்திரா & மஹெந்திராவிற்கு போட்டி ஏற்படுத்த வில்லை என்றால் நமக்கு சொகுசு ஸ்கார்ப்பியோவோ இல்லை குறைந்த விலை டாடா நானோவோ கிடைத்திருக்காது.

ஆக போட்டியாளன் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கம் வகிக்கிறான். உங்களுக்கு மட்டுமல்ல அவனின் பலமும் குறையாமல் இருப்பது தான் இருவருக்கும் நன்று. இலக்கு என்று ஒன்று இல்லாமல் மனிதனால் இயங்குவது கடினம். நம் இலக்குகளை தேர்ந்தெடுக்க வைப்பவன் நம் போட்டியாளன். மறைமுகமாக ஒரு நண்பனுக்கு உறிய எல்லாத் தகுதிகளும் நம் போட்டியாளனுக்கு இருக்கிறது. தகுதியான போட்டியாளனை அழிக்க நினைப்பது, நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்குச் சமம்.

கமல் என்ற போட்டியாளன் இல்லை என்றால் ரஜினி இல்லை,

ஜெயலலிதா அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பதாலே கருணாநிதியால் இன்னும் சுருசுருப்பாக இயங்க முடிகிறது. உங்கள் போட்டியாளன் உங்களை முந்திச்செல்கிறபோது நீங்கள் அவர்களின் டார்கெட்டை தாண்ட முயற்சி செய்வீர்கள். அப்போது அது நீங்கள் இதுவரைக்கும் தொடாத வளர்ச்சியாக இருக்கும். முதல் வேலையாக போட்டியாளனின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குங்கள், அவன் பலம், பலவீனம் தெரிந்து விடும், உங்கள் பலம், பலவீனமும் புரிந்து விடும். அதே சமயம் நீங்கள் உங்களை கவனிக்க வேண்டாம் அவன் பார்த்துக்கொள்வான்.

உங்களின் சரி, தவறு, குற்றம், குறை எல்லாம் அவன் எடுக்கும் முயற்சிகளிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களை சரியாக வளர்ப்பதின் மூலம் உங்கள் போட்டியாளனுக்கு எப்போதும் நேருக்கடி கொடுக்கிறீர்கள். மாறாக போட்டியாளனை எதிரியாக்குவதால் அவன் துரும்பைக் கூட இழக்க மாட்டான், அவனின் வேகத்தை கூட்டிய புண்ணியத்துக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்!

ஆக, தகுதியுள்ள போட்டியாளன் நம் மறைமுக நண்பனே!.

தவறான கல்வி முறையே உலகின் பிரச்சினைகளுக்கு காரணம்

இன்றைய கல்வி ஒருவனை சிறந்த மருத்துவராக, அனுவிஞ்ஞானியாக, ஆறாய்ச்சியாளனாக பொருளாதார நிபுணராக, என்ஜினீயராகவோ மாற்றுகிறது .

ஆனால்-

இன்றைய கல்வி முறை எப்படி நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி மனிதனுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.

’போதும்’ என்ற மனத்திருப்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை. மிகவும் முக்கியமான, உலகம் முழுவதையும் தழுவிய சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எதுவும் விளக்குவதில்லை. மிகப்பெரிய அளவில் அழிவை உருவாக்கி வரும் யுத்தங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதைப் பற்றியும் சொல்லித்தருவதில்லை.

இன்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வரும் கல்வி ஒருவன் தன்னை எப்படி மிகப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறது. போட்டி வெறியைவ் வளர்த்து மனிதனை மனிதனிடமிருந்து பிரித்து வருகிறது. ஏற்கனவே இருந்துவரும் பயங்கரமான ஆயுதங்களைவிட இன்னும் மிகப்பெரிய அளவில் நாசத்தை உருவாக்கும் ஆயுதங்கள எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறது.

கல்வியின் முக்கியமான நோக்கம் மனிதர்களிடையே மனித பண்புகளை வளர்ப்பதற்காக் இருக்க வேண்டும். உலகத்தில் இருந்து வரும் யுத்தங்கள், கலவரங்கள், அராஜகம் போன்ற உலகப்பிரச்சினைகளை முழுமையாக அகற்றி, அவைகள் மீண்டும் உருவாகதபடியான சூழ்நிலையை கல்வி உருவாக்க வேண்டும்.

உலக சாதனை, சுய முன்னேற்றம், திறமை என்று பலவிதமாகச் சொல்லி, நாம் நம்மிடம் இருந்துவரும் பேராசை, பதவி வெறி, ஆடம்பர வாழ்க்கை, போட்டி மனப்பான்மை போன்றவைகள் சரியானவைகள் என்று சொல்லி, அவைகளை நியாயப்படுத்தி வருகிறோம்.

இது போன்ற தவறான அனுகுமுறைகளே நிறைய உலக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதனால் கல்வி முறையில் நல்லதொரு மற்றம் கொண்டுவருவது முக்கியம்.

கனாக்காலங்கள்

டீச்சர் இந்த பாய் (BOY)என்னை அடிக்கிறான், இல்ல டீச்சர் இந்தப் பிள்ளை தான் என்ன முதல்ல கிள்ளினுச்சுன்னு ஒருத்தர ஒருத்தர் புகார் சொல்லிக்கொண்டு கைகோர்த்து வளர்ந்த பழைய நண்பர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியை பற்றி எழுதும் தொடர்பதிவு. தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் ‘அப்பாவி முரு’ அவருக்கு என் நன்றி.

நான் படித்தது மெட்ரிக்குலேசன் பள்ளி என்பதால். என்னுடைய பள்ளிப் படிப்பை மூன்று வயதில் தொடங்கியவன் நான்.

எல்கேஜி வகுப்பு: முதல் நாள் சீறுடை(வெள்ளை நிற சட்டை, சிகப்பு நிற கால் சட்டை, டை, சூ )அனிந்து அம்மாவிற்கு டாடா காட்டி சென்ற ஞாபகம். எங்களுக்கு இரண்டு வருக்கி ரொட்டியும் சில விளையாட்டு பொருட்கள் தந்து விளையாட்டு காட்டிய ’எல்கெஜி’ வகுப்பாசிரியை பொன்ராஜம். பள்ளி ஆரம்பித்து ஒர் இரு நாள் கழித்து அட்மிசன் கிடச்சு பள்ளியில் சேரும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அறிமுகம் செய்து கொள்வது எங்கள் பள்ளியில் வழக்கம். அப்படி சேர்ந்த ஒருமாணவர் மிட்டாய் எல்லோருக்கும் கொடுக்க , நான் மட்டும் கைநிறைய அள்ள எங்கள் இருவருக்கும் சண்டை மூண்டு நான் அவனை கிழே தள்ளியபின் தான் தெரிந்தது பொன்ராஜம் டீச்சர் எவ்வளவு கண்டிப்பானவர் என்று.

யுகெஜி வகுப்பு: ’யுகேஜி’யும் எல்கேஜி போல அரை நேர படிப்புதான் என்ன ஒரு வித்தியாசம் எல்கேஜியில் வர்க்கி ரொட்டி, யுகேஜி யில் ’பன்’. எனக்கு கொடுக்க பட்ட பன்னின் அடிப்பாகம் கருப்பாக இருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த மாணவனின் பன்னை பிடுங்கித்திங்க, இந்த முறை என்னை அடித்த வகுப்பாசிரியை பாமா.

முதல் வகுப்பு: கருப்பாடு, வெள்ளை ஆடு , மற்றும் கோடாளியும் தேவதையும் கதை சொல்லித்தந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான். நான் பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் வரை எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான்.

2ம் வகுப்பு~ 3ம் வகுப்பு: ஹெப்சிபா வின்செண்ட் டீச்சர். இவர் கதோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். ரொம்ப அன்பானவர். நான் எனது வகுப்பில் (7ம் வகுப்பு வரை) எப்பொழுதும் முதல் ராங்க் வாங்குவதால் இவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். இவர் நான் ஒருமுறை கணக்கில் நூறுக்கு இரண்டு மதிபெண் குறைவாக வாங்கியதால் இவரும் என்னை ஒருமுறை அடித்த ஞாபகம்.

4ம் வகுப்பு: சரியா ஞாபகம் இல்லை.

5ம் வகுப்பு: இந்த முறை வகுப்பாசிரியையாக வந்தவர் பள்ளி துணை தலைமை ஆசிரியை பிரபாவதி. இவர் எனக்கு அறிவியல் வகுப்பு எடுத்தார். ஒருமுறை தேர்வில் நான் எல்லாக் கேள்விக்கும் பதில் அளித்தும் எனக்கு மதிப்பெண் குறைவாக கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிரபாவதி டீச்சரிடம் கேட்டேன். எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்குன்னு எனக்கு மதிப்பெண் குடுக்க மறுக்க, நீங்கள் எனக்கு மதிப்பெண் தரலைனா நான் எங்க அப்பாவிடம் (அப்பாவியிடம் இல்லை) சொல்வேன் என்று சொல்ல, டீச்சர் என்னை உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

மறுநாள் எங்கப்பா ஆஜர், விவாதம் கடுமையாக நடந்து எனக்கு தலைமை ஆசிரியர்(மஹாதேவன் இவர் மட்டும் தான் ஆசிரியர்) முன்னிலையில் எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதன் பின் ராங்க் கார்ட் கொடுக்கப்பட்டது, அப்பொழுது இன்னொரு விபரீதம் நடந்தது, எனக்கும் சுதா என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கும் படிப்பில் போட்டியாக இருக்கும். அவள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் வருவாள்,
இந்த முறை அவள் தான் முதல் ராங்க் என்று எதிர்பார்தவளுக்கு ஏமாற்றம், நான் இழந்த மதிப்பெண்னை பெற்று முதலிடம் பிடிக்க கடுப்பாகிப் போனவள் என் கண்ணத்தை கடித்து என் ராங் கார்டையும் கிழிக்க மறுநாளும் எங்கப்பா பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் சாமியாடிவிட்டு போன ஞாபகம்.

எனக்கு பள்ளி ஆசிரியைகளை விட டியுசன் டீச்சர் சந்திராவிடம் தான் பயம் அதிகம். ஒரு நாள் அவரிடம் படித்துக் கொண்டிருக்கையில் சிறுநீர் அடிவயிற்றை முட்ட நான் டீச்சரிடம் கேட்க பயந்து நான் இருந்த இடத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க, டீச்சர் காதுக்கு விசயம் எட்டியது. டீச்சருக்கு கெட்ட நேரம் போல, என்னை வெளியே போக அனுமதிக்காமல் என்னை அடித்தது தான் தாமதம் அடக்கி வைத்திருந்த மிச்ச சொச்சத்தையும் டீச்சரின் வீட்டிற்குள்ளேயே இறக்கி முடித்ததேன்.

இன்றைக்கும் என் நண்பர்கள் இந்த விசயத்தைச் சொல்லி நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கிண்டலடிப்பது உண்டு. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்காக கொஞ்சூண்டு மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

நான் அன்றைக்கு நன்றாகப் படித்ததால் இன்றைக்கும் என்னை நினைவில் வைத்துப் பெயர் முதற்கொண்டு மறக்காமல் என்னை எல்லா ஆசிரியையும் நலன் விசாரிப்பது மனதுக்கு மகிழ்சியாக் இருக்கு.

தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்.
1) ஜோதி பாரதி(அத்திவட்டி அலசல்)
2) பித்தன்
3) ராஜேஸ்வரி(ரசனைக்காரி, மூடுபனி)

அன்போடும், பண்போடும் தொடருங்கள் நண்பர்க்ளே...


.

காதல் பற்றி கண்ணதாசன் (மீள் பதிவு)

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்.
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறது.
நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது.
தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.

பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது. மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள். அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான். கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.


காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள். காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள். காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள். காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே. நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கொஞ்சம் கவனியுங்கள்.

இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்! இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம். இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.
உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம். பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம். பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.
இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.

இது எப்படி காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.
இலக்கியம் இளமைக்காதலை பறைசாற்றுகிறது. சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது. காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது. கட்டி முடித்த பின் கசக்கிறது.

தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது. நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்! காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்! காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்! தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!

என் தத்துவம் இதுதான்: காதல் இரண்டு வகைப்படும் ஒன்று தோல்வியுறுவது! மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.

காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்

வருங்கால இந்தியா இவர்கள் கையிலாம்









1) சுய லாபநோக்கோடு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள்

செக்ஸ் அறிவு, சரியான திட்டமிடல் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்.

தவறான வழியில் குழந்தை பெற்று அனாதைகளாக்கும் தாய்மார்கள்

கூலி குறைவு என்பதற்காக வேலை கொடுக்கும் முதலாளிகள்
பிச்சை எடுப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பிரிவினர்.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் கொண்ட சமூகத்தினர் (நான் உட்பட).

இப்படி இவர்களை போன்றோர் இருக்கும் வரை இந்தியா ஏழை நாடாகத்தான் இருக்கும். இந்த அவலங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

இவர்கள் நாளை சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு தீவிரவாதிகள் ஆனால், அதற்கு முழுப்பொறுப்பும் நம்மையே சாரும்.
தீவிரவாதிகள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.





எதிரியை உள்ளே அனுமதிக்காதீர்கள்

எதிரி என்ற சொல்லாடல் இங்கு நீண்ட நாட்களாகவே தவறான உபயோகத்தில் இருந்து வருகிறது.. யார் எதிரி, எது எதிரித்தனம் என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஓர் உண்மையான நண்பனை தெரிந்துகொள்வதற்குள் சில வருடங்கள் உருண்டுவிடுகின்றன. யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பதில் பல சந்தர்பங்களில் தடுமாற்றம், போராட்டம். நண்பனை அடையாளம் காண்பதில் இத்தனை சிக்கள் இருக்கும் போது, எதை அடிப்படையாக கொண்டு இவன் என் எதிரி என்று தீர்மானிப்பது.


எதிரிகளில் இரண்டு சாதி உண்டு. நமக்கு வெளியே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள் ஒருவகை, இன்னொருவர் நமக்கு உள்ளே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள். வெளியே இருக்கும் எதிரியை இனம் காணுதல் கடினம். உள்ளே இருக்கும் எதிரியை நாம் இனம் காணுதல் சுலபம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததற்கான அடையாளம் நம் வெளியுலக எதிரிகள்.
வாழ்க்கையில் தோற்றதற்கானா அடையாளம் நமக்கு உள்ளே இருக்கும் எதிரிகள்.

வெளியே இருக்கும் எதிரி பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உள்ளே இருக்கும் எதிரி பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்குள் இருக்கும் எதிரிகள் என்று சொன்னால், பொறாமை, தள்ளிப்போடுதல், ஒப்பீடு, சுய இரக்கம் இவைகள் தான்.

இவை எதுவும் எனக்கு இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் சொக்கத்தங்கம். எனக்கு வெளியேயும் எதிரிகள் இல்லையென்று ஒருவர் சொன்னால் அதில் பெருமை கொள்வதில் அர்த்தம் இல்லை. கவனம்! நீங்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதி, திறமை, அனுபவம், அறிவு இந்த நான்குக்கும் ஏற்றாற் போல, குறிக்கோள்கள் இருக்கும். நூறு ரூபாய் சம்பாதிக்கும் சராசரி தொழிலாளிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. ஆனால் மாதம் லகரம் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு கணவு பெரியதாக இருக்கும்.

குறைவான வாழ்க்கைத்தரத்தில் வாழ்பவர்கள், அடுத்த வேளை அல்லது அதிக பட்சமாக அடுத்த நாள்- இந்த வட்டத்தைத்தாண்டி கணவுகள் காண்பதில்லை. மரக்கட்டையைப்போல் மறத்துப் போனவர்கள் இவர்கள்.

இவர்கள் கணவு காண பயப்படுகிறவர்கள் அல்லது இவர்கள் இவர்களின் கணவின் மேல் நம்பிக்கை கொள்ளவதில்லை.
எதார்த்த வாழ்க்கைக்கு பழகிவிட்டவர்கள்.
கணவுகாணத் தெரியாததின் விளைவு, இலக்குகள் இருக்காது.

விளக்கு அனையும்வரை காற்றோடு போரடித்தான் ஆக வேண்டும். சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் குறைந்து போனால், பிறகு எப்படி ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பது?

1)ஆக கணவு காணாமல், இலட்சியம் இல்லாமல் உங்களை எதார்த்தத்திலே வைத்திருக்கும் முதல் எதிரி நீங்கள் தான்..

2) உங்கள் முன்னால் முன்னேறிக்கொண்டிருக்கும் நண்பனை தொட்டுவிட ஆசை. முடியவில்லை, மேலும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்யாமல், மாறாக பொறாமை சுரக்குமேயானால், நீங்கள் உங்கள் இரண்டாவது எதிரியை உள்ளுக்குள்ளே அனுமதிக்கிறீற்கள். பொறாமை மனதில் தோன்றாதவரை நீங்கள் ஹீரோ. தோன்றிவிட்டால் உங்களைப் போன்ற ஒரு எதிரியை படைத்த கடவுளாலும் படைக்க முடியாது.
3) எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடுதல் அலலது தாமதப்படுத்தும் பழக்கத்தை கொண்டிருந்தீர்களேயானால் உங்களின் சோம்பேறித்தனத்தின் மூலமாக உங்களது மூன்றாவது எதிரியை வளர்க்குறீர்கள்.

4) உங்களின் செயலுக்கு வெற்றி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அந்தத் தோல்விக்கான வழி வகைகளை ஆறாய்ந்து மேலும் துடிப்புடன் செயலாற்றாமல் சுய இரக்கம் கொண்டு, உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக்கொண்டீர்களேயானால் உங்களது நான்காவது எதிரியை சம்பாதித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

5) தன்முனைப்பு இல்லாமை, வெட்கப்படுதல் கூட தனிமனித முன்னேற்றதுக்கு தடைகற்கள் தான்.

இப்படிப்பட்ட எதிரிகளை அழிக்காமல் உங்களுக்குள்ளே வைத்திருப்பீர்களேயானால், நஞ்சை தனக்குள்ளே வைத்துக்கொண்டு சாகாத பாம்பைப் போல
நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் நீங்கள் எதிரியாகிவிடுவீர்கள்.

தோல்விகளை வெற்றிகளைப்போல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெற்றிகளை நெருங்கமுடியாது. நம் குறைகள் நமக்குத் தெரியாவிட்டால் பின்பு நம் குறைகளே நம் இயல்பாகிவிடும்.

நம் முன்னேற்றத்துக்கு தடைபோடும் எதிரிகளை களைவோம்.

இந்தியா ஒளிர்கிறதாம்

























































போக்குவரத்து சட்டத்த எப்படி மதிக்கணும்னு இவுங்கள பார்த்துதான் தெரிஞ்ச்சுக்கணும்







விழுந்து விழுந்து சிரிக்கனுமா இதப் படிங்க


1) Sardar proposed a Girl . . .
Girl said 'I'm 1 year elder to you' . . .
Sardar said 'Oye No Problem Soniye, I'll marry you NEXT YEAR.

2) Sardar : I hav'nt slept all nite in the train.
Friend : why?
Sardar : Got upper berth.
Friend : why didn't you exchange?
Sardar : Oye, there was nobody to exchange in the lower berth..

3) A man asked sardarji, why Manmohan singh goes walking at evening not in the morning. Sardarji replied ''Arey bhai Manmohan is PM not AM''

4) Flash news: A 2 seater plane crashed in a graveyard in punjab .
Local sardars have so far found 500 bodies and are still digging for more..

5) Three Construction workers are working on the 20th floor of a tall building in Bombay. One is a Mallu, the second is a Bengali and the third is a Sardarji. Every day all the three meet in the lunch hall and have their lunch together.
One fine day-the Mallu opened his lunch box and finds idlis in the box. He says " I am fed up of eating these idlis daily. If I find idlis in the box tomorrow, i will jump from the 20th floor and die".
Next the Bengali opens his lunch box and finds Fish in it and says, If I find fish in my lunch box tomorrow, I am going to jump from the 20th floor of this building and die".
Next the Sardarji opens his lunch box and finds Parathas in it and says "Mother promise, if I find parathas in my box tomorrow I am also going to jump from the 20th floor"
Next day the three friends meet in the lunch room for lunch.
Mallu opens his lunch box and finds Idlis and promptly jumps from the 20th floor and dies.

The Bengali opens his lunch box and finds fish in it and jumps from the 20th floor and dies.
Sardarji opens his box and finds parathas and he also jumps from the 20th floor and dies.

In the combined funeral held for all the three friends by their colleagues,


the Mallu's widow says "I did not know he hated idlis so much. If not I would have packed something else for his lunch".
The Bengali's widow says "I did not know he hated fish so much. If not I would have packed something else for his lunch"
The sardarji's widow says "I do not understand what went wrong. My husband always prepared his own lunch!"

6)
Urine Test
Two sardarjis were sitting outside a clinic. One of them was crying like anything.
So the other asked, "Why are you crying?"
The first one replied, "I came here for blood test"
Second one asked, "So? Are you afraid?"
First one replied, "No, not that. During the blood test they cut my finger"
Hearing this the second one started crying.
The first one was astonished and asked other, "Why are you crying?"
The other replied, "I have come for my urine test."

7)
A train suddenly deviated from the tracks and ran onto the nearby fields before returning on the tracks again.
The passengers were horrified at this. At the next railway station, the driver was caught and questioned.
He was a sardar and explained that a man was standing on the tracks and he refused to budge. The authorities asked him, "Sardarji, are you mad? Just to save one person, you put so many lives in danger.
You should have overrun that person."
The sardar replied: "Exactly, that is what I was doing, but this idiot started running towards the field when the train came very close."

8)
One Sardar was enjoying Sun on a Beach in UK.
A lady came and asked him, " Are you relaxing" Sardar answered '" No I am Banta Singh"
Another Guy Came and asked the same Question. Sardar answered " No No Me ! Banta Singh"
Third one came and asked the same question, Sardar was totally annoyed and decided to shift his place.
While walking he saw another Sardar enjoying the Beach.
He went and asked him " Are you Relaxing?".
The other Sardar was much educated and answered "Yes I am relaxing.
The Sardar slapped him on his face and said "Idiot, they are all searching for you and you are sittinghere

கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்

இன்றைய உலகில் சினிமா மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு துறையாக, நல்ல செய்திகளை கொண்டுசெல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதே சமயத்தில் சில மோசமான வழிகாட்டுதலையும் அது உண்டாக்காமல் இல்லை.

இந்திய சினிமா பெண்களின் ஆடை விசயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலமாக இந்திய பாரம்பரிய கலாச்சார சீரழிவுக்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆரம்பகால சினிமாக்களில் பெண்கள் ஆபாசமாக நடிக்கவில்லை, சினிமா மோகம் மக்களிடம் வளர வளர
சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது, நடிகைகள் பணத்துக்காக ஆபாசமாக நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் நடிகையாவதற்கு அதுவே தகுதியாக சினிமாக்காரர்கள் கொண்டுவந்துவிட்டனர்.

பனத்துக்காக நடிகைகள் அப்படி நடித்தார்கள் என்று சொன்னால் அது ஓர் அளவுக்கே உண்மை, ஏனெனில் இன்றைக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பணம் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் நன்கு படித்த, வசதிபடைத்த மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பணத்தை விட பேர், புகழின் மீது ஒரு ஏக்கம். அதை அடைவதற்கு இவர்கள் ஆபாசமாக நடிப்பதற்குமேலே ஒரு படி சென்று ஆடையே இல்லாமல் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். (உ.த மல்லிகா ஷெராவத் படம் ; மித்)


சினிமாவை வளர்ப்பதற்கு ஊடகங்கள் தேவை, ஊடகங்களின் வருமானத்திற்கு சினிமா தேவை. ஆக இந்த இரண்டும் பின்னிப் பினைந்து ஜடை போட்டுக்கொண்ட தொழிற்களாகிவிட்டன. அதனால் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகங்கள் தட்டிக்கேட்காமல் விட்டதோடில்லாமல் நடிகைகளின் ஆபாசப்படங்களையும் அவர்களை பற்றிய உப்புக்கு பிரயோசனம் இல்லாத செய்திகளை வெளியிட்டும் தன் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது.


மேலும், இவர்கள் செய்யும் கூத்துக்களை பாராட்டியும் கவுரவிக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவர்களுக்கு பட்டங்களையும், உச்ச பச்ச மரியாதையையும் தந்து இவர்களின் இழி செயல்களை ஞாயப்படுதுகின்றன.



என்றைக்கு இந்தியப் பெண்கள் உலக அழகிப்பட்டம் வாங்கிவந்தார்களோ அன்றிலிருந்து மாடெலிங் துறை மற்றும் பேசன் டிசைனிங் துறையின் வளர்ச்சியின் வேகம் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.

அறிவுடைய, நன்கு படித்த வசதிகொண்ட மேல் வர்கத்துப்பெண்கள் அறைகுறை ஆடையில் சினிமாவிலும், அரைநிமிடம் வந்து போகும் விளம்பரப்படங்களிலும் வருவதுமட்டும் அல்லாமல், பொது நிகழ்சிகளிலும் அத்தகைய ஆடைகளில் வருவதை பார்க்கும் சாதாரன கீழ்தட்டு குடும்பத்துப் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படி ஆடை அணிவது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றன.

படித்தவர்கள் நல்ல வழிக்கட்டியாய் இல்லமல் போனதன் விளைவே இன்றைக்கு தெருக்களில் கூட நம் பெண்கள் துனிந்து ஆபாசமாக ஆடைஅனிந்து வருவதை பார்க்கமுடிகிறது.

ஆக மாடெலிங் மற்றும் பேசன் டிசைனிங் துறைகள் கவர்ச்சி கண்ணிகளின் விளைநிலமாக விளங்குகின்றன. சினிமா விளைச்சளுக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்கிறது. ஊடகங்கள் இவர்களை சந்தைப்படுத்துவதற்கு துனை போகின்றன.






(எங்கே செல்லும் இந்தப் பாதை.)











வாழ்வின் கடைசி தருணங்களில் ஒருவர் எடுத்த மிக அறிய புகைப்படம்

சுமத்ராவில் ஏற்பட்ட முப்பத்தி இரண்டு அடி உயர சுனாமி அலை
கடவுள் பக்தி உள்ளவரோ, கடவுள் பக்தி இல்லாதவரோ, நல்லவரோ கெட்டவரோ எல்லோரும் இயற்கைக்கு முன் ஒன்று தான்.

நீங்கள் கடவுளை வணங்கினாலும் வணங்காமல் போனாலும் நடப்பது தான் நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

பிகு;
இந்தப் படத்தை எடுத்தவர் இப்பொழுது உயிருடன் இல்லை.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன.
இது காதல்.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்..
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறத்து.

நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.

பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது.
மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள்.
அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான்.
கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.

காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள்.
காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள்.
காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள்.

காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே.
நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கொஞ்சம் கவனியுங்கள்.

இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்!
இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம்.
இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.


உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம்.
பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம்.
பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.

இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.
இது எப்படி காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.

இலக்கியம் இலமைக்காதலை பறைசாற்றுகிறது.
சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது.

காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது.
கட்டி முடித்த பின் கசக்கிறது.
தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது.
நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்!
காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்!
காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்!
தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!

என் தத்துவம் இதுதான்:
காதல் இரண்டு வகைப்படும்
ஒன்று தோல்வியுறுவது!
மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.

பிகு:
காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்

வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை

வடகொரியாவின் ஏவுகனைச்சோதனை, அந்நாட்டைப் பொறுத்தவரை அந்த நாட்டின் பதுகாப்பைக் கருதி நடத்தப்பட்ட சோதனையே. ஆனால், அதனை ஐநா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியா கண்டனம் தெரிவித்து இருந்தால் அது ஏற்புடையதே, ஏனெனில் அது தென்கொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது என சொல்லலாம்.

ஆனால் எல்லாவிதமான ஆயுதங்களையும் தாங்கி நிற்கும் அமெரிக்கா, ஈராக்கை வீழ்த்தி எண்ணை வளங்களை கையகப்படுத்தியது. அதே காரணத்திற்காக ஈரானுடன் போர்தொடுப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டிருக்கிரது.

உலக நாடுகளின் நாட்டாமையாக தன்னை நினைத்துக்கொண்டு அமெரிக்கா தற்பொழுது வடகொரியாவை மிரட்டுகிறது. ஐநாவோ உடனடி பொருளாதாரத் தடையை அமுல்படுத்துகிறது. சீனா ஐநாவின் பொருளாதாரத்தடையை எதிர்த்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது. ஐநாவை சீனா ஆதரித்தால் தற்சமயம் வடகொரியாவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல வடகொரியர்கள் சீனாவில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டியிருக்கும், இதை அறிந்து கொண்ட சீனா மொளனம் காக்கிறது.

ஐநா வடகொரியாவின் மீது கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடையை உற்றுக் கவணித்தால் ஒன்று விளங்கும். அது அமெரிக்க எகாதிபத்தியம் ஐநாவிற்கு இட்ட கட்டளையென்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும். இதில் கொடுமை என்னவென்றால் இந்தியாவும் பூம்பூம் மாட்டைப் போல் அமெரிக்கா சொல்வதெர்க்கெல்லாம் தலையாட்டுவது தான்.

வடகொரியா வெறும் ( குறுந்தொலைவு ஏவுகணை) ஆயுதச் சோதனை செய்வதை கண்டித்து உடனடி பொருளாதார தடை விதிக்கும் ஐநா, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்த இலங்கை அரசை என்னன்ன வெல்லாம் செய்திருக்க வேண்டும், ஆனால் வெறும் பேச்சுக்கு கண்டணத்தை தெரிவித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டது.

முந்நூறு ஆயிரம் ஈழத்து மக்கள் உணவு, மருந்து, தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகூட கிடைக்காமலும், உயிறிழப்பு ஏற்பட்டும், எத்தனை முறை கூக்குரலிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இருந்து, சீனா, ருஸ்யா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மிக பயங்கரமான அயுதங்களை விற்று தன் பணப்பையை நிறப்பிக்கொள்ள வழிவகுத்துத்தந்து விட்டு இப்பொழுது வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதும், பொருளாதாரத்தடை விதிப்பதும் நகைப்புக்கு இடமலிக்கிறது.(அடடா என்ன அக்கறை என்று தோன்றுகிறது).

தெரியாமல் தான் கேட்குறேன், ஆமாம் நீங்கள் யாருக்காக ( ஐநா) செயல்படுகிறீர்கள், மக்களுக்கா அல்லது முதலாலித்துவத்துக்கா, எங்கள் ஊர் அரசியல் வாதிகள் தான் பதவி என்றால் அம்மணமாக நிற்கிறார்கள் என்றால் நீங்கள் எதுக்காக நிற்கிறீர்கள் என்பது விளங்கவில்லை.

தற்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்கா வடகொரியாவின் ஆயுதச் சோதனை பிற்காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்களின் உயிர் குடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஈரனும், வடகொரியாவும் வல்லரசாக உருவெடுக்குமோ என்ற அச்சம் தான் காரணம். என்ன செய்து இந்திய அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததென்பது தெரியவில்லை, ஆனல் சீனவிடம் தன் ஜம்பம் எடுபடவில்லை, அது போல் நாளை வடகொரியா, ஈரன் உருவாகிவிட்டால், உலக நாடுகளின் நாட்டாமை என்று தன்னை சொல்லிக்க முடியாமல் போகக்கூடும் என்பதை மனதில் கொண்டு அமெரிக்கா இந்தக் கண்டணத்தை தெரிவித்துள்ளது. செஞ்சோத்துக் கடன் தீர்க்க இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உண்மையாக ஐநாவிற்கு மக்கள் மீது அக்கறை இருந்து இருந்தால் இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிற்பந்தித்திருக்களாம், ஆனால் செய்யவில்லை, காரணம் இலங்கையில் நடந்தது எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்கவில்லை, தன் முதலாளிக்கு வடகொரியாவால் ஆபத்து என்று தெரிந்தஉடன் ஐநா தன் எஜமானனுக்காக வாளை ஆட்டுகிறது.

(யானைக்கும் அடி சறுக்கும் என்று யாரும் அமெரிக்காவிற்குச் சொல்லவில்லை போலும், யானை விழுந்தால் எழுந்திரிக்கமுடியாது.)

ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.



”எது மனித சக்திக்கு எட்டவில்லையோ அதுவே தெய்வம் என்கிறான் ஆத்திகன்.”

”இல்லை, இல்லை அது இயற்கை என்கிறான் நாத்திகன்.”


உலகத்தை வெல்ல நினைக்கும் விஞ்ஞானிகளே இதை வெல்ல முடியவில்லை. ஆனால் பிறப்பும் இயற்கை, இறப்பும் இயற்கை என்று சுலபமாக சொல்லிவிடுகிறான் நாத்திகன்.

எது அந்த இயற்கை?

அது தானாக அமைந்தது என்கிறான் .
தானாக என்றால் எப்படி?
எங்கிருந்தோ வந்தது என்கிறான்.
எங்கிருந்தோ என்றால்?
விழிக்கிறான்.

எல்லாம் தானாக உண்டாயிற்று என்றால், குழந்தை ஏன் பூமியில் தானாக உண்டாவதில்லை?
தாய், தந்தை என்று ஏன் இரண்டு பேர் தெவைப்படுகிறார்கள்?
உண்மயில் ஒவ்வொரு பிறப்பிற்கும் மூலமிருக்கிறது.
மூலத்திற்கும் மூலம், சூன்யத்திலிருக்கிறது.
அதுதான் ஆதி மூலம் என்கிறான் ஆத்திகன்.



ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.


தெரிந்த பொருளைப் பற்றி விவதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம்
சுவையாக நடக்கிறது.


கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி சூன்யத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.
கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.


எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.


விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது. உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.


தப்புங்குறீங்களா அப்போ வாங்க விவாதிப்போம்.

கருணைக்கொலை பாவமா?



”இந்து தர்மப்படி கருணைக் கொலை செய்வது பாவம், குற்றமாகும். “ எப்படிப்பட்டவரும் வாழ வேண்டும்’ என்கிறது இந்து மதம். அதனாலேயே தற்கொலை செய்து கொள்வதையும், கருணைக் கொலை செய்வதையும் ஒப்புக் கொள்வதில்லை இந்து மதம்.



எந்த காரணத்தினாலோ இழிநிலை அடைந்தவரிடமும் இரக்கப்படவேண்டும் என்றும், அப்படிப்பட்டவருக்கு தொண்டு புரிவதே புண்ணியம் என்கிறது இந்து மதம். இவ்வுலகில் எவருக்கும் அவரவர் விரும்பியபடி வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை, அது ஒவ்வொருவருக்கும் அவரவர் வினைப்படி வந்து அமைகிறது. அப்படி அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப துன்பங்கள் வருவதாகவும், அந்தத் துன்பங்களை எந்த நிலையிலும் அனுபவித்து இயற்கையாக இறக்கும் போது வந்த பாவவினை கரைந்து நிரந்திரமான நல்வாழ்க்கை அமைகிறது என்கிறது இந்துமதம்.



ஒருவர் துக்கப்படுகையில் அவர் அந்த துக்கத்தைத் தாங்குமளவுக்கு இதமளிக்கும் உதவியை இரக்கத்தால் பிறர் செய்வது நல்லவினை என்றும் அப்படிச் செய்பவருக்கு நலம் தரும் என்கிறது இந்துக்களின்(நம்முடைய) தர்மம். அதுவே மனித நேயமென்கிறது.



( மனிதனைப் படைத்தது கடவுள் என்றால் கடவுள் படைக்கையிலேயே எல்லோருக்கும் நல்ல சிந்தனையைத் தந்து படைத்து இருக்கலாம், சரி படைக்கும் போதுதான் தப்பு நடந்து விட்டது என்று வைதுக்கொள்வோம் மனிதன் தப்பு செய்கின்ற போது தடுத்து நிறுத்துவதை விட்டு வேடிக்கை பார்த்துக் இருந்து விட்டு, தப்பு நடந்து முடிந்தபின் தண்டனை கொடுப்பேன் என்று கடவுள் சொன்னால், இங்கே கடவுள் தத்துவத்திற்கும் , மனிதத்துவதிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகிறது. மனிதன் தான் சட்டம் என்ற சாட்டையால் நடந்த தப்புக்கு காரணகர்தாக்களை விட்டு விட்டு காரணத்தை தண்டிக்கிறான். எதுதப்பு எது சரின்னு உனக்கு உணர்த்தத்தான் எங்கள் கடவுள் உனக்கு அறிவை கொடுத்து இருக்கிறார் என்குறீர்களா, நடப்பதெல்லாம் விதிப்படி நடக்கிறது என்று நீங்கள் தான் சொல்குறீர்கள். அப்போ இங்கே தப்பு நான் செய்யவில்லை எனக்கான விதியை எழுதிய கடவுள் தப்பு செய்கிறார் என்று தானே பொருள். சரி இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரும் அவனே அதனால் அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துகொள்கிறான் என்குறீர்களா, அப்படியே வைதுக்கொள்வோம் ஆனால் தண்டனை அனுபவிக்கும் பொழுது கடவுளுக்கு வழித்தால் சரி ஆனால் இங்கே எனக்கு வழிக்கிறதே. சரி விடுங்கள் ரொம்ப ஆழமாக கடவுளைப்பற்றி ஆராய வேண்டாம்)

ஒருவர் அனுபவிக்க வேண்டிய துக்கம் வேறு எவராலும், எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிடக் கூடியதன்று என்று நம்புகிறது இந்து மதம். உயிர்கள் எல்லாம் ‘வாழ வேண்டும்’ என்ற வேட்கையில் உடலைத் தாங்க உலகில் வந்துள்ளன. வாழ வேண்டும் என்ற துடிப்பை உள்ளில் கொண்டே சுவாசிக்கின்றன, உணவு உண்ணுகின்றன, இனவிருத்தி செய்கின்றன, வளருகின்றன.



அதனால் உடலில் வந்துள்ள எல்லா உயிருக்குமே உலகில் வாழ உரிமை இருக்கிறது, எதனுடைய வாழ்வையும் தடுக்கவோ, அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும், அப்படித் தடுப்பதும், அழிப்பதும் பாவம் என்றே பண்பும், நாகரிகமும் வகுத்துவைகப்பட்டுள்ளதாக இந்து மதம் கூறுகிறது.”



”கருணைக் கொலை செய்யப்பட்ட நபர், தன்னுடைய பாவ வினையைத் தீர்க்காமல் மறித்துக்கொள்வதால் அவர் அந்தத் துன்பத்திலிருந்து தப்பித்து விடுவதில்லை என்றும், அவர் அந்தப் பாவத்தின் முழு பலனையும் கரைக்கும் வரை அவர் பிறப்பெடுப்பார் என்றும் கூறுகிறது இந்து மதம். அதனாலேயே இறப்பிற்குப் பின்னால் பாவ புண்ணியம் தொடரும் என்றும் சொல்லிவைத்தது.


(பற்றித் தொடரும் மிருவினை பாவபுன்னியமுமே என்றார் பட்டினத்தார்).



இங்கே நான் கொஞ்சம் முரண்படுகிறேன்.



வேதனையுடன் உயிர் வாழ்வதைவிட நிம்மதியாக ஒருவனைச் சாகச் செய்து விடுவது மேல் என்பதே கருணைக்கொலையின் நோக்கம். ஒருவன் சகிக்க முடியாத துன்பத்தில் துடிப்பது, அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் துயரமே. (உதாரனமாக கோமா மற்றும் பக்கவாதத்தில் அவதிப்படுபவர்கள்).



ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளமுடியாது , ஆனால் பக்கவாதத்தால் ஒருவர் அவதிப்படுகிறார் என்றால் அவருக்கு நோயின் கடுமை புரியும், வாய் பேச இயலாமலும், இயற்க்கை உபாதைகளைக் கழிக்கக் கூட இன்னொருவர் உதவியை இறக்கும் வரை நாட வேண்டி இருக்கிறது. அதனால் கோமாவில் ஒருவர் பலகாலமாக அவதிப்படுகிறார் என்றால் அவரைக் கேட்காமலும், அதே போல் பக்கவாதத்தில் பலகாலமாக அவதிப்படும் ஒருவர் தன்னால் மேலும் நோயில் அவதிப்பட முடியாது என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் ஞாயம் இருந்தால் அவர் விருப்பப்படி அவரை கருணைக் கொலை செய்வது பாவமாகதென்று நினைக்கிறேன்).



(கோமாவில் இருப்பவர் எந்த நேரத்திலும் குணமடயமுடியும் அவரைக் கொள்வதற்கு நீங்கள் யார் என்று கேட்பது எனக்கு கேட்கிறது. நான் இன்றைக்கு இருக்கும் மனிதனின் அவசர வாழ்க்கையை மனதில் கொண்டு அப்படிச் சொன்னேன். மேலும் அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உடன் இருந்து அவர் குணம் அடையும் வரை அல்லது அவர் இறக்கும் வரை பார்த்துக்கொள்வேன் என்று சொன்னால் நீங்கள் தான் அவரைப்பொருத்தவரை கடவுள். மனிதநேயம் உங்களிடம் மிச்சம் இருக்கிறது என்று தெரிகிறது)


( பவம் புன்னியம் என்பதெல்லம் அவரவர் மனசு சார்ந்த விசயங்கள். ஒருவருக்கு பாவமாக தெரிவது இன்னொருவருக்கு பாவமாகத்தெரியாது. மேலும் மனிதனை நெறிப்படுத்துவதற்காகவும், வாழ்க்கை முறையை சீர்படுத்துவதற்காகவும், வலுத்தவன் இளைத்தவனை வதைக்காமலும், இழிந்தவர்மேல் இரக்கம் கொள்ளச் செய்வதற்காகவும் பெரியோர்களால் சொல்லிவைக்கப்பட்டதே பாவ புண்ணியமென்று நினைக்கிறேன்)



பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்

இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கு பதிவுலக நன்பர்கள் மண்ணிக்கவும்.

சிங்கப்பூர் பதிவர்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி ஒருதலைப்பை வைத்தேன். ஈழத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.

நன்பர் ஒருவர் கேட்டார்:

ஈழத்து மக்கள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் கட்டுறையாக, கவிதையாக பலவாறான செய்திகளை இனையத்தின் (டமிலிஸ்) வாயிலாக நீங்கள் எழுதுவதெல்லாம் எதற்கு?

உங்களுடைய பதிவு நிறைய வாக்குகள் வாங்கி பிரபலமான இடுகைகளின் பட்டியலில் இடம் பெறுவதற்கும், உங்களின் எழுத்துத் திறமைக்கும், சிந்தனைக்கும் மற்றவர் மத்தியில் என்ன மாதிரியான அங்கிகாரம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவுமே நீங்கள் பரபரப்பான செய்திகளை எழுதுகிறீர்கள் என்றார்.

நான் சொன்னேன்:

அழுகைச்சத்தம் கேட்டாலொழிய இழவு வீடென்பது தெரியாது. பத்துப்பேர் சேர்ந்து சத்தம் போட்டாலொழிய பிரச்சினையின் தீவிரம் புரியாது. எங்களைப் போன்ற பத்துப்பேர் நாங்கள் அறிந்த செய்தியை மற்றவரின் மத்தியில் சென்றடைய வழிவகுக்குறோம். மேலும் எங்களால் எங்கள் அதங்கங்களை இங்கே தான் கொட்டித்தீர்க்க முடிகிறது என்றேன்.

அதற்கு அவர்: கிழித்தீர்கள். பதிவர்கள் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈழத்துப் பிரசினையை கையாலாமல் உங்களின் சொந்த தற்பெருமைக்காக அவர்களைப் பற்றி எழுதிவிட்டு இப்போது சப்பைக்கட்டு கட்டப்பார்க்குறீர்கள் . உண்மையில் உங்களுக்கு ஈழத்துப் பிரச்சினையில் அக்கரையில்லை. அதைப்பற்றி எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துக்களால் பலரை வசீகரித்து அவர்களின் செல்வாக்கைப் பெறப்பார்க்குறீர்கள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார இல்லையா, இறந்து போன மக்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஈழத்துப்பிரசினையில் இந்திய மத்திய மாநில அரசின் நிலைப்பாடு என்ன, ஊடகங்களின் ஒருபட்சமான செய்தி என்று இது போன்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நீங்கள் ஈழத்து மக்களுக்கு செய்வது என்ன?

ஒன்றுமில்லை.

மேலும் நீங்கள் ஒன்றும் போர்களத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்து எழுதவில்லையே, ஊடகங்களின் வாயிலாக தெரிந்ததைத்தானே எழுதுகிறீர்கள். தெரிந்ததை எழுதுவதால் என்ன பயன்?

உங்களை நான் கேட்பதெல்லாம் இதுதான்.

அவர்களுக்கு கடமையாற்ற உங்கள் கரங்கள் நீள வேண்டாம். அவர்கள் கண்ணீர் துடைக்க உங்கள் விரல்கள் நீட்டுங்கள்.

அங்கே குழந்தைகள் பாலுக்காகவும், பெரியவர்கள் ஆறுதலுக்காகவும், காயம்பட்டவர்கள் மருத்துவ உதவிக்காகவும் துடித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் செய்தித்தாளிலும், வானொளியிலும், இனையத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் ஈழத்து மக்களின் அவலங்கலைப் பார்த்து இன்றைக்கு எனக்கு சோறு கூட இறங்க மாட்டேங்குதுன்னு ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் பதிவிற்காக அதே ஊடகங்களின் வாயை பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.

சோறு கிடைத்தால் காக்கை தன் சுற்றத்தையே அழைத்துக் கொண்டு வருகிறது. ஒரு காக்கை இறந்துவிட்டல் இருநூறு காக்கைகள் சூழ்ந்து கொள்கின்றன. நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். ஆகையால் நன்பரே உங்களுடைய அடுத்த பதிவர் சந்திபிலாவது ஈழத்து மக்களின் துயரத்தை துடைக்கும் படியான திட்டங்களையோ அல்லது உதவிகளையோ கொண்டுவருவோம் என்று முடிவெடுங்கள் என்றார்.

அவர் விடைபெற்றுப் போகையில் ”மனிதன் வயிற்றுக்குப் பசி தெரியும் வரை மனத்துக்கு உறவு தெரிகிறது. அது அவன் குற்றமல்ல இயர்க்கையின் குற்றம். இயற்கை வயிற்றில் பசியை வைத்தது பசி தேவையைத் வைத்தது தேவை தன்னலத்தை வளர்த்தது தன்னலம் எல்லைகளை படைத்தது. எல்லை, உனர்ச்சிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டது. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட உறவு, ஊரை கூடக்கருதாமல் வீட்டுக்குள் முடங்கி விட்டது. வீட்டிலிருந்து ஊருக்கும், ஊரிலிருந்து நாட்டுக்கும் உறவு தன் முழுக்கரங்களையும் எப்போது விரிக்கும் என்று முனுமுனுத்துக் கொண்டு போனது காதில் விழுந்தது”.

அவர் பேச்சிலிருந்து நான் எடுத்துக்கொண்டது, எழுதுவதால் ஈழத்துப் பிரச்சினை உலகைச் சென்றடையும் தான் இல்லையென்று சொல்லவில்லை. தற்பொழுது போர் முடிந்து விட்டது இனியும் எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமாக எதாவது நம் இனத்துக்கு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

சிங்கப்பூர் பதிவுலக நன்பர்களே நம் அடுத்த சந்திப்பை இப்பொழுதே கூட்டி ஆவன செய்வோம். வாருங்கள்.