அடித்து நொருக்கி பழிவாங்கு

இதுதான்
இவ்வளவுதான்
இதெல்லாம் சகஜம்
என்கிறது சமூகம்

மறந்துவிடு
மன்னித்துவிடு
என்கிறது
ஆண்மீகம்

அடுத்த தோல்விக்கு தயாரா
என்கிறது தத்துவ ஞானியின்
உபதேசம்

அடித்து நொருக்கி பழிவாங்கு
என்கிறது கோபம்

அறிவின் ஊற்றிலிருந்து
தடுக்கிறது மனிதநேயம்

ஆனால்

குழம்பிய மனம்
ஆண்மீகம் மேல்
என்று தெளிந்தது

எங்கோ படித்த ஞாபகம்

மக்கள் தொகை 900 கோடி

உலகம் பூராவுமே நதிகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழிறங்கி வருகிறது, தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?.

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவதுதான் பூமியின் அத்தனைச் சூழல்
பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு ரொட்டி தயாரிப்பதற்கு 550 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது கோதுமை பயிரிடுவது முதல் அது ரொட்டியாகத் தயாராகும் வரையிலான தண்ணீர்ச் செலவு இது.

வளரும் நாடுகளில் 70 முதல் 90 சதவித குடிநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு, மற்றும் விவசாய அமைப்பான FAO உலக அளவில் எடுத்த ஆய்வு ஒன்றில் 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக இருக்கும் என்றும், அப்போது தண்ணீர் தேவை இப்போது இருப்பதைப்போல இரண்டு மடங்காக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

என்ன செய்யப்போகிறோமோ?

காற்று கெட்டிபடுவதும் சுலபமாவதும்


வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனைப்போல,
இரவுக்காக காத்திருக்கும்
நிலவைப்போல,
காற்றுக்காக ஏங்கி நிற்கும்
இதயம்போல,
உன்னுடைய ஒரு ஹாய்
அல்லது ஒரு ஹலோவை
எதிற்பார்த்து விடியும் என்
உலகத்தை, எப்படி புரியவைப்பேன்
உனக்கு!

உன்னைப் பார்க்கும் நொடிகளில்
சுவாச இழுப்பிற்கு காற்று
சுலபமாவதும்,
பிரியும் நொடிகளில்
காற்று கெட்டிபடுவதும்
தவிர்கமுடியாத ஒன்றாகிவிட்டது.


இந்தக் கண்ணாடியில் முகம்
பார்த்தவர்கள் அணேகம்.
முகம் பதித்தவள்
எவரும் இல்லை!

முத்துக்கான வித்து எப்பொழுதும்
விழலாம் என்று வாய்திறந்து இருக்கும்
சிப்பி போல
தனக்கான ஒருத்தியை
ஒவ்வொரு முகத்திலும்
எதிர்பார்த்து நிற்கிறது
இந்தக் கண்ணாடி.

இதில் உன் பிம்பம் விழுந்து
உறைவதும், மறைவதும்
உன் கையில்.

அழுது நிற்கும் குழந்தையைப்போல
எனது வேதனையையும், விருப்பத்தையும்
சுமந்து வந்திருக்கும்
என் கடிதத்தை
அரவணைப்பதும்,
அவமதிப்பதும்
உன் பொறுப்பு

என்னவளே,
இப்பொழுது சொல்,
நான் உனக்கு,
வழிப்போக்கனா? இல்லை
உயிர் காவலனா?