பார்ப்பனக் கடவுள்


அர்ச்சனை தட்டில்
ஒத்த ரூபாயிட்டால்
கையில் திருநீறு, குங்குமம்.

நூறுரூபாய் என்றால்,
சாமிக்கு அர்ச்சனை.

ஐநூறு ரூபாய் என்றால்,
சாமிக்கு அருகாமையில்
அர்ச்சனை.

ஆயிரம் என்றால்,
சாமி கழுத்து மாலை
பிரஷாதம்!

லட்சம் என்றால்,
வீடு தேடி வரும்
பிரஷாதம்!!

கோடி என்றால்,,
உன் வீடே கோயில்!!
நீயே கடவுள்!!!