மக்கள் தொகை 900 கோடி

உலகம் பூராவுமே நதிகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் கீழிறங்கி வருகிறது, தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?.

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவதுதான் பூமியின் அத்தனைச் சூழல்
பிரச்சினைகளுக்கும் காரணம். ஒரு ரொட்டி தயாரிப்பதற்கு 550 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது கோதுமை பயிரிடுவது முதல் அது ரொட்டியாகத் தயாராகும் வரையிலான தண்ணீர்ச் செலவு இது.

வளரும் நாடுகளில் 70 முதல் 90 சதவித குடிநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு, மற்றும் விவசாய அமைப்பான FAO உலக அளவில் எடுத்த ஆய்வு ஒன்றில் 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக இருக்கும் என்றும், அப்போது தண்ணீர் தேவை இப்போது இருப்பதைப்போல இரண்டு மடங்காக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

என்ன செய்யப்போகிறோமோ?

0 comments: