துரதிஸ்டம்






வர்ணங்கள் கிடைத்த போது
தூரிகை இழந்தேன்
ஓவியம் கிடைத்த போது
கண்கள் இழந்தேன்


வாரித்தைகள் கிடைத்த போது
கவிதை மறந்தேன்

வெளிச்சம் கிடைத்த போது
நிழலை இழந்தேன்
வானம் வசமான போது
கைகள் இழந்தேன்
கணவுகள் வந்த போது
தூக்கம் இழந்தேன்



வறுமை வந்த போது
உறவுகள் இழந்தேன்
பணம் வந்த போது
அடக்கம் தொலைத்தேன்



ஆத்திரம் கொண்டபோது
அன்பை இழந்தேன்
அன்பை இழந்த போது
அவளை இழந்தேன்
அவளை இழந்த போது
நான் என்னையே இழந்தேன்

0 comments: