மனித நேயமும் ஆத்திகனும்



கால்கள் கட்டப்பட்டு, கழுத்து வளைக்கப்பட்ட ஆடு , ஐயோ என்னை விட்டுடுங்கடா என்பது போல் ஈனசுரத்தில் கத்திக் கொண்டே சுற்றி இருந்தவர்களைப் பார்க்க, சுற்றி இருந்த கூட்டமோ பயபக்தியோட பூசாரியை பார்க்க, கெடாக்கொம்பு போல மீசை வைச்சிருக்கும் பூசாரி அந்த ஆட்டின் கழுத்தை கரகரவென அறுக்க, ஆட்டின் சத்தமும், இரத்தமும் கண்கள் மேலே சொருக சிறிது சிறிதாக அடங்கியது.



ஒரே வீச்சில் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு ஓடி விழுந்த சேவலின் இரத்தமும், ஆட்டின் இரத்தமும் மண் சட்டியில் கொண்டுவரப்பட்டது. அதை பூசாரி ஒரே மூச்சில் குடித்து முடித்து கூட்டத்துக்கு அருளாசி வழங்கினார்.


பிறகு வெட்டப்பட்ட நான்கறிவு, ஐந்தறிவு ஜீவன்கள் சமைத்து சாமிக்கு படைக்கப்பட்டது. அப்போது அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரின் கைபேசியில், மரண தண்டனை என்ற பெயரில் அரேபியாவில் தலை துண்டிக்கப்படும் நிகழ்ச்சி பலர் முன்னிலையில் நடப்பதை பார்த்த எல்லோரும், இது என்ன காட்டுமிராண்டித்தனமா இருக்கு, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம வேடிக்கை வேற பார்க்குறாங்கன்னு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.


அப்போது அங்கே இருந்த ஒருத்தர் கேட்டார், நீங்கள் செய்ததற்கும், அரேபியாவில் நடப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை, இங்கே ஆடு அங்கே மனிதன் எல்லம் உயிர் தான் என்றார். ஆட்டையும், சேவலையும் கொல்லும் போது வராத மனித நேயம், இப்போ மட்டும் எப்படி வந்தது? என்றார்.


உடனே பூசாரி ”இது சாமி சமாச்சாரம் என்றும், இவன் இங்க வந்து நாத்திகம் பேசுறான், நம்ம சடங்கு சம்பிரதாயங்கள கிண்டல் பண்ணுறான், இவன துறத்துங்கடான்னார்.


” முடியை மழித்தால் வளராது என்றால் உங்க சாமிக்கு உங்க மசிரக்கூட குடுக்க மாட்டிங்கடான்னு முணுமுணுத்துக் கொண்டே போனார் அந்த நபர்.


மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.

14 comments:

தமிழ் ஓவியா said...

//மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.//

நல்ல பதிவு.
நன்றி

வேடிக்கை மனிதன் said...

//தமிழ் ஓவியா said...
//மக்களின் அறிவைக் கிளறிவிட்டு அவர்களுக்கு அறிவுச்சுதந்திரத்தை உண்டாக்க நினைக்க இங்கே கேள்வி கேட்பவன் நாத்திகன், எதையும் ஆராயாமல், மத, சாத்திர, புராணங்கள் போன்ற சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்கவிடாமல் மக்களை அப்படியே மடமையிலையே வைத்து இருக்க நினைப்பவன் அல்லது தடைபோடுபவன் ஆத்திகன் என்றால், நாத்திகன் மேலானவன் என்பது என் எண்ணம்.//

நல்ல பதிவு.
நன்றி//

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி

ஊர்சுற்றி said...

மனித நேயம் என்று பார்த்தால் அங்கு தெய்வத்திற்கு வேலையே இல்லை. எல்லோரும் நாத்திகவாதிகள் என்ற நிலையிலிருந்தே பேசவேண்டியிருக்கும்.

நல்ல பதிவு.

Joe said...

நல்ல இடுகை, நண்பா!

Copy pasting lines from comments?!? dude, that's way too redundant!

வேடிக்கை மனிதன் said...

//ஊர்சுற்றி said...
மனித நேயம் என்று பார்த்தால் அங்கு தெய்வத்திற்கு வேலையே இல்லை. எல்லோரும் நாத்திகவாதிகள் என்ற நிலையிலிருந்தே பேசவேண்டியிருக்கும்.

நல்ல பதிவு.//

எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துங்கள் என்பது தான் கடவுள் தத்துவம்னு சொல்ற ஆத்திகர்கள், கடவுள் பெயரைச் சொல்லி கொலை செய்வது என்பது எப்படி புனிதம் என்று சொல்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

வேடிக்கை மனிதன் said...

//Joe said...
நல்ல இடுகை, நண்பா!//

முதன்முறையா பாராட்டியிருக்கும் நண்பர் ஜோ விற்கு என் நன்றி

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

கோவி.கண்ணன் said...

:)
ஆட்டுக்கறியை பங்கிட்டு சாப்பிட இப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

புலால் உண்ணுவது தவறு இல்லை என்று நினைக்கும் சமூகம் அதை எப்படி வெட்டிச் சாப்பிட்டாலும் ஒண்ணு தானே ?

உயிர்களிடத்து அன்பு (ஜீவ காருண்யம்) பாவ / புண்ணியம் தொடர்புடையது அல்ல, ஒரு உயிரை கொல்லலாமா கூடாதா என்பதே.

கிருஷ்ணா said...

நண்பா.. எங்கயோ இடிக்குதே?!

நாத்திகர்கள் மனித நேயம் கொண்டவர்களோ? அவர்கள் உயிர்வதை செய்வதில்லையா?

குறை சொல்லவில்லை.. ஆனால்.. உங்கள் பதிவு.. ஒரு சாராரை சார்ந்திருக்கிறது என்பது என் கருத்து. எல்லா ஆத்திகவாதிகளும் உயிர் வதை செய்வதுமில்லை.. எல்லா நாத்திகவாதிகளும் மனித நேயத்தை பேணுவதுமில்லை!

ஆட்டுக்கடாவை பலிகொடுக்கும் ஒரு மூடனை ஆத்திகவாதி என்று எப்படி சொல்லலாம்?? இவர்களைப் பலிப்பதால் மட்டும் ஒரு நாத்திகவாதி நல்லவன் என்று சொல்ல வரும் கருத்தையும் ஏற்பதற்கில்லை..!

ஆனால், ஒன்று மட்டும் நிஜம்.. சிந்தனையை தூண்டும் பதிவு!

கிருஷ்ணா said...

இன்னொரு விஷயம்.. பால்பண்ணைகளில் பசுமாடுகளை கொடுமைப் படுத்தி.. பால் கறந்து உலகெங்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. எனக்கு தெரிந்தவரை, எல்லா ஆத்திகர்களும் பால் அருந்துகின்றனர்.. பால் சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொள்கின்றனர்.. இவர்களைப் போன்றவர்களால்தானே பாலின் தேவை அதிகரித்து பசுக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றன.. அப்படியானால், பால் உண்ணுவது கூட பாவம்தானே!

வேடிக்கை மனிதன் said...

நன்றி விஜய்

வேடிக்கை மனிதன் said...

//கோவி.கண்ணன் said...
:)
ஆட்டுக்கறியை பங்கிட்டு சாப்பிட இப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

புலால் உண்ணுவது தவறு இல்லை என்று நினைக்கும் சமூகம் அதை எப்படி வெட்டிச் சாப்பிட்டாலும் ஒண்ணு தானே ?//

உங்களது முந்தைய பதிவிலிரிந்தே விளக்கம் எடுத்துள்ளேன் பொருத்தருள்க
உயிர் கொலை அல்லது கொல்லுதல் பாவம் என்றாலும் கோவிலுக்காக அதைச் செய்வது புனிதம், நன்மை என்று சொல்லி இழிசெயல்களுக்கும் புனிதம் கற்பிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

வேடிக்கை மனிதன் said...

//குறை சொல்லவில்லை.. ஆனால்.. உங்கள் பதிவு.. ஒரு சாராரை சார்ந்திருக்கிறது என்பது என் கருத்து. எல்லா ஆத்திகவாதிகளும் உயிர் வதை செய்வதுமில்லை.. எல்லா நாத்திகவாதிகளும் மனித நேயத்தை பேணுவதுமில்லை!//

என்பதிவு யாரையும் உயர்திப் பேசவேண்டும் என்பதற்காக எழுதவில்லை. மனித நேயம் இல்லாதவர்கள் இருபக்கதிலும் இருக்கிறார்கள் என்பதே என்கருத்து. மேலும் கடவுள் பெயரைச் சொல்லி தன் விருப்பத்தை பூர்தி செய்து கொண்டு, அது கடவுள் பெயரைச் சொல்லி பலி இடுவதால் அது தவறு இல்லை என்று மக்களை நம்பச் செய்து தன்னை ஆத்திகப் போர்வைக்குள் மறைக்கும் இப்படிப் பட்டவர்கள் நாத்திகர்களை பலிப்பது என்ன ஞாயம்.

கிருஷ்ணா said...

உயிர் பலி கொடுப்பவர்களை நீங்கள் ஆத்திகர்களாகவே மதிக்கக் கூடாது என்பதே என் கருத்து. ஆத்திகம் வேறு.. அறிவீனம் வேறு..!