இனி தமிழன் நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டியது தான்

நடந்து முடிந்த இலங்கை vs விடுதலைப்புலிகள் போர் ஒன்றை வெளி நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவழியினருக்கு வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.

அதாவது எந்த நாட்டில் வாழும் தழிழர்களுக்கும் எந்தப் பிரச்சினை என்றாலும் இந்திய ஏகாதிபத்தியம் கண்டுகொள்ளப்போவதில்லை மாறாக அந்த நாட்டு அரசுக்கு வேண்டிய இரானுவத்தையும் ஆயுதங்களையும் தந்து அவர்களின் வேலைப் பலுவையும் குறைத்து அந்த நாட்டின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுக்கொள்ளும், ஏனெனில் தற்போது இந்தியாவை ஆழ்பவர் தமிழரும் அல்ல இந்தி்ய வம்சாவழியில் வந்தவரும் அல்ல.

தமிழ் நாட்டு மக்களும் தங்களுக்கு சுயமரியாதை, சூடு, சொரனை கிடையாது மேலும் எங்களுக்கு பணம் தரும் கட்சிக்கு விசுவாசிகளாய் இருப்போம் என்று நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்து விட்டார்கள்.


இலங்கை இராணுவம் தமிழக இராமேஸ்வர மீணவர்களை துப்பாக்கியால் சுட்டும், கைது செய்வதயும், படகுகளை தாக்குவதையும், மீணவர் வாழ்வாதார் உரிமைகளை நசுக்குவதையுமே கண்டுகொள்ளாத நிலையில் இந்திய மத்திய மாநில அரசுகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை கண்டுகொள்ளும் என்பது ....................

தமிழன் இனி நாடோடிகளாக வாழப்பழகிகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனம்

2 comments:

jojo said...

poka poka therium........

வேடிக்கை மனிதன் said...

வருகைக்கு நன்றி ஜோ ஜோ