இனப்படுகொலையில் அதரவு காட்டியதில் யாருக்கு முதலிடம்

எத்தனை கண்ணிப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டாலும், எத்தனை இளைஞர்களின் கழுத்து நெரிக்கப்பட்டாலும், குழந்தைகள் சொட்டுப்பாலுக்காக அழுது அழுது வயிறு காஞ்சு வரண்டு போனலும், எத்தனை பெரியவர்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் மருந்துக்காகவும் சிங்களவனை கையேந்தி நின்றாலும், ஒட்டு மொத்த ஈழத்து மக்களும் சொந்தங்களை கண்முன்னே இழந்து ஈனச்சுரத்தில் அழுதாலும்


மத்திய அரசை தட்டிக்கேட்கும் தகுதிகள் இருந்தும், காந்தியின் குரங்குகளைப்போல் கண், காது, வாய் போன்ற புலன்களை பொத்தி இருந்து தன்னுடைய அரசியல் ஆதாயமே முதன்மை என்று, உதவிக்காக் இவர் காள்களை கட்டி அழுத ஈழத்துக் குழந்தைகளை உதறிவிட்டு நாற்காலியின் காள்களை கட்டிக்கொண்ட முதல்வர் கருணாநிதி


(இந்த 86வது வயதிலும் முதல்வர் பதவியை வகிப்பது, குடும்ப அரசியலை காப்பது, மகனுக்கு முதல்வர் பதவியை தாரைவார்க்க துடிப்பது, தமிழர்களுக்கு எந்தப்பயனும் இல்லாமல் ஆட்சியை நடத்திக்கொண்டு தழிழ் காவலர் என்ற பட்டத்தை தக்கவைக்க நினைப்பது, தன்னுடைய இறப்பிற்குப் பின் பெருந்தலைவர்களின் சிலைகளுக்குப்பக்கத்தில் தனக்கும் ஒரு இடத்தைப் பிடிப்பது மற்றும் தமிழ் பாடப்புத்தத்தில் தமிழ் காவலர் ஐயா மு.கருணாநிதி என்று அடுத்த சந்ததியினரை படிக்க வைப்பத்துமே இப்போதைக்கு இவருடைய தலையாய நோக்கங்களாக உள்ளன)


தேர்தலுக்கு முன்பு வரை தமிழ் ஈழம் என்ற ஒன்றே இல்லை என்று சொல்லிவந்த ஜெயலலிதா பிறகு அரசியல் லாபநோக்கக்கணக்குப் பார்த்து ஈழத்துப் பிரச்சினையை கையில் எடுத்த இந்த அம்மையார்

ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாது என்று தெரிந்தும், இந்தத் பாரளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதால் தான் அதிமுக ஓட்டுக்களைத்தான் பிரிக்கப்போகிறோம், அப்படிப்பிரிப்பதனால் ஈழத்துப்பிரச்சினையில் அம்மாவை நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடப்போகிறோம் என்று தெரிந்தும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை பரிசித்துப்பார்க்க நினைத்த விஜயகாந்த்

வைகோ, மருத்துவர், திருமா போன்றோர்கள் உண்மையில் ஈழத்து மக்களின் பிரச்சினயில் அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், ஈழத்துப் மக்களை கண்டுகொள்ளாத கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டு தாங்கள் ஈழத்து மக்களின் பங்காளிகள் என்று நிரூபித்திருக்கலாம் அதை விட்டு ஈழத்து மக்களை கண்டு கொள்ளாத மற்றும் ஈழத்து பிரச்சினையில் ஆதயம் தேடும் இரு மாபெரும் கட்சியிலேயே இருந்து கொண்டு சந்தர்ப்ப அரசியல் நடத்திக்கொண்டு ஈழத்து மக்களுக்கு குரல் குடுக்குறோம் என்று சொல்வது நகைப்புக்கு இடமளிக்கிறது.( இவர்களின் வீர வசனமெல்லாம் அரவானிகள் பிள்ளை பெற்று காட்டுகிறோம் என்று சவால் விடுவதற்குச்சமம்)

ஓட்டுப் பிச்சை கேட்டு கையேந்தும் சந்தர்ப்ப அரசியல் வாதிகள் ஒரு பக்கம், தங்களின் வாழ்வாதார உரிமைகளில் உதவுமாறு கையேந்தும் உடன் பிறப்பு மறுபக்கம் இதில் எந்த யாசகன் தனக்கு எவ்வளவு தருவான் என்று மனசாட்சியை தொலைத்துவிட்டு (எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும்…………………..அஞ்சு பணம் என்று இருந்து) தன் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகார அரசுக்கு, போரிலே என் சகோதரனின் தாய், தந்தை, குழந்தைகளின் நெஞ்சிலே உங்களுடைய கத்தி குத்திக் குத்தி கூர் மழுங்கிவிட்டால் மாற்றுக்கத்தியை தீட்டிதருகிறோம் என்று காத்துக்கொண்டு இருந்த அரசின் 50க்கும் 100க்கும் தன் வாக்குகளை தந்து அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி ஈழத்து மக்களின் வேதனையில் வேலைப்பாச்சிய (ஓட்டுரிமையை விற்று பிழைப்பு நடத்தும்) தமிழக மக்கள்

இதில் யாருக்கு முதல் இடம் கொடுப்பது?

0 comments: