போட்டியாளன் எதிரியா?

எல்லோருக்கும் வரக்கூடிய குழப்பம். ஒன்றும் தெரியாதவன் போல் நம் அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஆசாமி, நம் போட்டியாளனா? இல்லை நம் எதிரியா? என்பது தான்.


யார் நண்பன்? யார் எதிரி?


நீ முந்தி, நான் முந்தி என வணிகரீதியாக சண்டையிடும் இரு பெரிய நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளரா? இல்லை எதிரியாளரா?


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் போட்டியாளன் வேறு!, எதிரி வேறு!


போட்டியாளனுக்கும், எதிரிக்கும் நூலளவு தான் இடைவெளி. உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை நிர்மூலமாக்கிய கோக் நிறுவனம் உள்ளூர் நிறுவனத்துக்கு எதிரியே. ஆனால், உலக விற்பனையில் 38% பங்கை வைத்திருக்கும் பெப்சி, கொக்ககோலாவின் தகுதியுள்ள போட்டியாளனே.

சேதுசமுத்திரத் திட்டத்தை கொண்டு வர எதிர்க்கும் எந்த ஒரு எதிர் கட்சியும் ஆளும் கட்சிக்கு எதிரியே!. ஒன்று நினைவில் கொள்ளுங்கள் எல்லா போட்டியாளரும் எதிரிகள் அல்ல.


அப்பொழுது யார் நம் எதிரி?


நாம் இன்னொருவர் தொழிலை முழுமையாக அழிக்க நினைக்கும் போது தான் போட்டியாளன் எதிரியாகிறான். போட்டியாளன் போட்டியில் பின் தங்கிப்போனால், அவனுடைய குறிக்கோள் அவனின் சுய முன்னேற்றமாக இருக்காது, மாறாக நம்மை அழிப்பதாகவே இருக்கும்.(போட்டியாளனாக படுக்கைக்குப் போனவன் விழிக்கையில் எதிரியாகத் தான் கண் விழிப்பான்)


போட்டியாளன் என்பவர் ரேஸில் ஓடிக்கொண்டிருப்பவர், என்றாவது ஒருநாள் அவர் உங்களை, அல்லது நீங்கள் அவரை வெல்ல வேண்டும்.


அடிக்கோடிட்டுப் படியுங்கள்!!


வெல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதல்ல போட்டியாளரின் நோக்கம். போட்டியாரை அழிக்க நினைப்பது முட்டாள் தனம். போட்டியாளர்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள், அவர்களை அழிக்க நினைக்கும் நேரத்தில் நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ளலாம்.

ஓட்டப்பந்தயத்தில் நம்மை தள்ளிவிட்டு ஜெயிக்க நினைப்பவன் நம் எதிரி, நம்மை விட வேகம் கூட்டி நம்மை முந்த நினைப்பவன் போட்டியாளன். நமக்கே தெரியாமல் நம்மை வளர்ப்பவன் நம் போட்டியாளன்!. போட்டியாளன் பலத்தை குறைத்தால் நீங்கள் அசுர பலம் பெற்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். அவன் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் போது நீங்கள் உங்கள் பலத்தை அதிகமாக்கிக் கொள்கிற வாய்ப்பை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்.

போட்டி இல்லாத உலகம் சோம்பலை வாசல் தெளித்து வரவேற்கும். இவ்வுலகில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற மமதையை ஏற்படுத்தும். போட்டியில்லாத வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூவாக மாறிவிடுவீர்கள்.

எட்டடி பாய்ந்த நீங்கள் போட்டியாளன் பத்தடி பாய்வதை தடுத்தால் பிறகு நீங்கள் பதினாறு அடி பாய்கிற சூழல் வாய்க்காமலேயேப் போய்விடும். பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்து டாடா மற்றும் மஹெந்திரா & மஹெந்திராவிற்கு போட்டி ஏற்படுத்த வில்லை என்றால் நமக்கு சொகுசு ஸ்கார்ப்பியோவோ இல்லை குறைந்த விலை டாடா நானோவோ கிடைத்திருக்காது.

ஆக போட்டியாளன் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கம் வகிக்கிறான். உங்களுக்கு மட்டுமல்ல அவனின் பலமும் குறையாமல் இருப்பது தான் இருவருக்கும் நன்று. இலக்கு என்று ஒன்று இல்லாமல் மனிதனால் இயங்குவது கடினம். நம் இலக்குகளை தேர்ந்தெடுக்க வைப்பவன் நம் போட்டியாளன். மறைமுகமாக ஒரு நண்பனுக்கு உறிய எல்லாத் தகுதிகளும் நம் போட்டியாளனுக்கு இருக்கிறது. தகுதியான போட்டியாளனை அழிக்க நினைப்பது, நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்குச் சமம்.

கமல் என்ற போட்டியாளன் இல்லை என்றால் ரஜினி இல்லை,

ஜெயலலிதா அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பதாலே கருணாநிதியால் இன்னும் சுருசுருப்பாக இயங்க முடிகிறது. உங்கள் போட்டியாளன் உங்களை முந்திச்செல்கிறபோது நீங்கள் அவர்களின் டார்கெட்டை தாண்ட முயற்சி செய்வீர்கள். அப்போது அது நீங்கள் இதுவரைக்கும் தொடாத வளர்ச்சியாக இருக்கும். முதல் வேலையாக போட்டியாளனின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குங்கள், அவன் பலம், பலவீனம் தெரிந்து விடும், உங்கள் பலம், பலவீனமும் புரிந்து விடும். அதே சமயம் நீங்கள் உங்களை கவனிக்க வேண்டாம் அவன் பார்த்துக்கொள்வான்.

உங்களின் சரி, தவறு, குற்றம், குறை எல்லாம் அவன் எடுக்கும் முயற்சிகளிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளலாம்.

நீங்கள் உங்களை சரியாக வளர்ப்பதின் மூலம் உங்கள் போட்டியாளனுக்கு எப்போதும் நேருக்கடி கொடுக்கிறீர்கள். மாறாக போட்டியாளனை எதிரியாக்குவதால் அவன் துரும்பைக் கூட இழக்க மாட்டான், அவனின் வேகத்தை கூட்டிய புண்ணியத்துக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்!

ஆக, தகுதியுள்ள போட்டியாளன் நம் மறைமுக நண்பனே!.

தவறான கல்வி முறையே உலகின் பிரச்சினைகளுக்கு காரணம்

இன்றைய கல்வி ஒருவனை சிறந்த மருத்துவராக, அனுவிஞ்ஞானியாக, ஆறாய்ச்சியாளனாக பொருளாதார நிபுணராக, என்ஜினீயராகவோ மாற்றுகிறது .

ஆனால்-

இன்றைய கல்வி முறை எப்படி நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி மனிதனுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.

’போதும்’ என்ற மனத்திருப்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் எதுவும் சொல்லிக்கொடுப்பதில்லை. மிகவும் முக்கியமான, உலகம் முழுவதையும் தழுவிய சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் எதுவும் விளக்குவதில்லை. மிகப்பெரிய அளவில் அழிவை உருவாக்கி வரும் யுத்தங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதைப் பற்றியும் சொல்லித்தருவதில்லை.

இன்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வரும் கல்வி ஒருவன் தன்னை எப்படி மிகப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறது. போட்டி வெறியைவ் வளர்த்து மனிதனை மனிதனிடமிருந்து பிரித்து வருகிறது. ஏற்கனவே இருந்துவரும் பயங்கரமான ஆயுதங்களைவிட இன்னும் மிகப்பெரிய அளவில் நாசத்தை உருவாக்கும் ஆயுதங்கள எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறது.

கல்வியின் முக்கியமான நோக்கம் மனிதர்களிடையே மனித பண்புகளை வளர்ப்பதற்காக் இருக்க வேண்டும். உலகத்தில் இருந்து வரும் யுத்தங்கள், கலவரங்கள், அராஜகம் போன்ற உலகப்பிரச்சினைகளை முழுமையாக அகற்றி, அவைகள் மீண்டும் உருவாகதபடியான சூழ்நிலையை கல்வி உருவாக்க வேண்டும்.

உலக சாதனை, சுய முன்னேற்றம், திறமை என்று பலவிதமாகச் சொல்லி, நாம் நம்மிடம் இருந்துவரும் பேராசை, பதவி வெறி, ஆடம்பர வாழ்க்கை, போட்டி மனப்பான்மை போன்றவைகள் சரியானவைகள் என்று சொல்லி, அவைகளை நியாயப்படுத்தி வருகிறோம்.

இது போன்ற தவறான அனுகுமுறைகளே நிறைய உலக பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதனால் கல்வி முறையில் நல்லதொரு மற்றம் கொண்டுவருவது முக்கியம்.

கனாக்காலங்கள்

டீச்சர் இந்த பாய் (BOY)என்னை அடிக்கிறான், இல்ல டீச்சர் இந்தப் பிள்ளை தான் என்ன முதல்ல கிள்ளினுச்சுன்னு ஒருத்தர ஒருத்தர் புகார் சொல்லிக்கொண்டு கைகோர்த்து வளர்ந்த பழைய நண்பர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியை பற்றி எழுதும் தொடர்பதிவு. தொடர் பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் ‘அப்பாவி முரு’ அவருக்கு என் நன்றி.

நான் படித்தது மெட்ரிக்குலேசன் பள்ளி என்பதால். என்னுடைய பள்ளிப் படிப்பை மூன்று வயதில் தொடங்கியவன் நான்.

எல்கேஜி வகுப்பு: முதல் நாள் சீறுடை(வெள்ளை நிற சட்டை, சிகப்பு நிற கால் சட்டை, டை, சூ )அனிந்து அம்மாவிற்கு டாடா காட்டி சென்ற ஞாபகம். எங்களுக்கு இரண்டு வருக்கி ரொட்டியும் சில விளையாட்டு பொருட்கள் தந்து விளையாட்டு காட்டிய ’எல்கெஜி’ வகுப்பாசிரியை பொன்ராஜம். பள்ளி ஆரம்பித்து ஒர் இரு நாள் கழித்து அட்மிசன் கிடச்சு பள்ளியில் சேரும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அறிமுகம் செய்து கொள்வது எங்கள் பள்ளியில் வழக்கம். அப்படி சேர்ந்த ஒருமாணவர் மிட்டாய் எல்லோருக்கும் கொடுக்க , நான் மட்டும் கைநிறைய அள்ள எங்கள் இருவருக்கும் சண்டை மூண்டு நான் அவனை கிழே தள்ளியபின் தான் தெரிந்தது பொன்ராஜம் டீச்சர் எவ்வளவு கண்டிப்பானவர் என்று.

யுகெஜி வகுப்பு: ’யுகேஜி’யும் எல்கேஜி போல அரை நேர படிப்புதான் என்ன ஒரு வித்தியாசம் எல்கேஜியில் வர்க்கி ரொட்டி, யுகேஜி யில் ’பன்’. எனக்கு கொடுக்க பட்ட பன்னின் அடிப்பாகம் கருப்பாக இருக்க, பக்கத்து இருக்கையில் இருந்த மாணவனின் பன்னை பிடுங்கித்திங்க, இந்த முறை என்னை அடித்த வகுப்பாசிரியை பாமா.

முதல் வகுப்பு: கருப்பாடு, வெள்ளை ஆடு , மற்றும் கோடாளியும் தேவதையும் கதை சொல்லித்தந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான். நான் பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் வரை எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பொன்ராஜம் டீச்சர் தான்.

2ம் வகுப்பு~ 3ம் வகுப்பு: ஹெப்சிபா வின்செண்ட் டீச்சர். இவர் கதோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். ரொம்ப அன்பானவர். நான் எனது வகுப்பில் (7ம் வகுப்பு வரை) எப்பொழுதும் முதல் ராங்க் வாங்குவதால் இவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். இவர் நான் ஒருமுறை கணக்கில் நூறுக்கு இரண்டு மதிபெண் குறைவாக வாங்கியதால் இவரும் என்னை ஒருமுறை அடித்த ஞாபகம்.

4ம் வகுப்பு: சரியா ஞாபகம் இல்லை.

5ம் வகுப்பு: இந்த முறை வகுப்பாசிரியையாக வந்தவர் பள்ளி துணை தலைமை ஆசிரியை பிரபாவதி. இவர் எனக்கு அறிவியல் வகுப்பு எடுத்தார். ஒருமுறை தேர்வில் நான் எல்லாக் கேள்விக்கும் பதில் அளித்தும் எனக்கு மதிப்பெண் குறைவாக கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிரபாவதி டீச்சரிடம் கேட்டேன். எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்குன்னு எனக்கு மதிப்பெண் குடுக்க மறுக்க, நீங்கள் எனக்கு மதிப்பெண் தரலைனா நான் எங்க அப்பாவிடம் (அப்பாவியிடம் இல்லை) சொல்வேன் என்று சொல்ல, டீச்சர் என்னை உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

மறுநாள் எங்கப்பா ஆஜர், விவாதம் கடுமையாக நடந்து எனக்கு தலைமை ஆசிரியர்(மஹாதேவன் இவர் மட்டும் தான் ஆசிரியர்) முன்னிலையில் எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதன் பின் ராங்க் கார்ட் கொடுக்கப்பட்டது, அப்பொழுது இன்னொரு விபரீதம் நடந்தது, எனக்கும் சுதா என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கும் படிப்பில் போட்டியாக இருக்கும். அவள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் வருவாள்,
இந்த முறை அவள் தான் முதல் ராங்க் என்று எதிர்பார்தவளுக்கு ஏமாற்றம், நான் இழந்த மதிப்பெண்னை பெற்று முதலிடம் பிடிக்க கடுப்பாகிப் போனவள் என் கண்ணத்தை கடித்து என் ராங் கார்டையும் கிழிக்க மறுநாளும் எங்கப்பா பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் சாமியாடிவிட்டு போன ஞாபகம்.

எனக்கு பள்ளி ஆசிரியைகளை விட டியுசன் டீச்சர் சந்திராவிடம் தான் பயம் அதிகம். ஒரு நாள் அவரிடம் படித்துக் கொண்டிருக்கையில் சிறுநீர் அடிவயிற்றை முட்ட நான் டீச்சரிடம் கேட்க பயந்து நான் இருந்த இடத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க, டீச்சர் காதுக்கு விசயம் எட்டியது. டீச்சருக்கு கெட்ட நேரம் போல, என்னை வெளியே போக அனுமதிக்காமல் என்னை அடித்தது தான் தாமதம் அடக்கி வைத்திருந்த மிச்ச சொச்சத்தையும் டீச்சரின் வீட்டிற்குள்ளேயே இறக்கி முடித்ததேன்.

இன்றைக்கும் என் நண்பர்கள் இந்த விசயத்தைச் சொல்லி நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கிண்டலடிப்பது உண்டு. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்காக கொஞ்சூண்டு மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டேன்.

நான் அன்றைக்கு நன்றாகப் படித்ததால் இன்றைக்கும் என்னை நினைவில் வைத்துப் பெயர் முதற்கொண்டு மறக்காமல் என்னை எல்லா ஆசிரியையும் நலன் விசாரிப்பது மனதுக்கு மகிழ்சியாக் இருக்கு.

தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்.
1) ஜோதி பாரதி(அத்திவட்டி அலசல்)
2) பித்தன்
3) ராஜேஸ்வரி(ரசனைக்காரி, மூடுபனி)

அன்போடும், பண்போடும் தொடருங்கள் நண்பர்க்ளே...


.

காதல் பற்றி கண்ணதாசன் (மீள் பதிவு)

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்.
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறது.
நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது.
தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.

பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது. மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள். அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான். கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.


காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள். காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள். காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள். காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே. நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கொஞ்சம் கவனியுங்கள்.

இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்! இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம். இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.
உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம். பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம். பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.
இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.

இது எப்படி காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.
இலக்கியம் இளமைக்காதலை பறைசாற்றுகிறது. சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது. காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது. கட்டி முடித்த பின் கசக்கிறது.

தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது. நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்! காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்! காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்! தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!

என் தத்துவம் இதுதான்: காதல் இரண்டு வகைப்படும் ஒன்று தோல்வியுறுவது! மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.

காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்

வருங்கால இந்தியா இவர்கள் கையிலாம்









1) சுய லாபநோக்கோடு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள்

செக்ஸ் அறிவு, சரியான திட்டமிடல் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்.

தவறான வழியில் குழந்தை பெற்று அனாதைகளாக்கும் தாய்மார்கள்

கூலி குறைவு என்பதற்காக வேலை கொடுக்கும் முதலாளிகள்
பிச்சை எடுப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பிரிவினர்.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் கொண்ட சமூகத்தினர் (நான் உட்பட).

இப்படி இவர்களை போன்றோர் இருக்கும் வரை இந்தியா ஏழை நாடாகத்தான் இருக்கும். இந்த அவலங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

இவர்கள் நாளை சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு தீவிரவாதிகள் ஆனால், அதற்கு முழுப்பொறுப்பும் நம்மையே சாரும்.
தீவிரவாதிகள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் வளர்க்கப்படுகிறார்கள்.





எதிரியை உள்ளே அனுமதிக்காதீர்கள்

எதிரி என்ற சொல்லாடல் இங்கு நீண்ட நாட்களாகவே தவறான உபயோகத்தில் இருந்து வருகிறது.. யார் எதிரி, எது எதிரித்தனம் என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது.

ஓர் உண்மையான நண்பனை தெரிந்துகொள்வதற்குள் சில வருடங்கள் உருண்டுவிடுகின்றன. யாரை நம்புவது, நம்பக்கூடாது என்பதில் பல சந்தர்பங்களில் தடுமாற்றம், போராட்டம். நண்பனை அடையாளம் காண்பதில் இத்தனை சிக்கள் இருக்கும் போது, எதை அடிப்படையாக கொண்டு இவன் என் எதிரி என்று தீர்மானிப்பது.


எதிரிகளில் இரண்டு சாதி உண்டு. நமக்கு வெளியே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள் ஒருவகை, இன்னொருவர் நமக்கு உள்ளே இருந்து தொந்தரவு கொடுப்பவர்கள். வெளியே இருக்கும் எதிரியை இனம் காணுதல் கடினம். உள்ளே இருக்கும் எதிரியை நாம் இனம் காணுதல் சுலபம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததற்கான அடையாளம் நம் வெளியுலக எதிரிகள்.
வாழ்க்கையில் தோற்றதற்கானா அடையாளம் நமக்கு உள்ளே இருக்கும் எதிரிகள்.

வெளியே இருக்கும் எதிரி பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், உள்ளே இருக்கும் எதிரி பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்குள் இருக்கும் எதிரிகள் என்று சொன்னால், பொறாமை, தள்ளிப்போடுதல், ஒப்பீடு, சுய இரக்கம் இவைகள் தான்.

இவை எதுவும் எனக்கு இல்லை என்று ஒருவர் சொன்னால் அவர் சொக்கத்தங்கம். எனக்கு வெளியேயும் எதிரிகள் இல்லையென்று ஒருவர் சொன்னால் அதில் பெருமை கொள்வதில் அர்த்தம் இல்லை. கவனம்! நீங்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனெனில் நீங்கள் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தகுதி, திறமை, அனுபவம், அறிவு இந்த நான்குக்கும் ஏற்றாற் போல, குறிக்கோள்கள் இருக்கும். நூறு ரூபாய் சம்பாதிக்கும் சராசரி தொழிலாளிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. ஆனால் மாதம் லகரம் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு கணவு பெரியதாக இருக்கும்.

குறைவான வாழ்க்கைத்தரத்தில் வாழ்பவர்கள், அடுத்த வேளை அல்லது அதிக பட்சமாக அடுத்த நாள்- இந்த வட்டத்தைத்தாண்டி கணவுகள் காண்பதில்லை. மரக்கட்டையைப்போல் மறத்துப் போனவர்கள் இவர்கள்.

இவர்கள் கணவு காண பயப்படுகிறவர்கள் அல்லது இவர்கள் இவர்களின் கணவின் மேல் நம்பிக்கை கொள்ளவதில்லை.
எதார்த்த வாழ்க்கைக்கு பழகிவிட்டவர்கள்.
கணவுகாணத் தெரியாததின் விளைவு, இலக்குகள் இருக்காது.

விளக்கு அனையும்வரை காற்றோடு போரடித்தான் ஆக வேண்டும். சங்கடங்களும் எதிர்பார்ப்புகளும் குறைந்து போனால், பிறகு எப்படி ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பது?

1)ஆக கணவு காணாமல், இலட்சியம் இல்லாமல் உங்களை எதார்த்தத்திலே வைத்திருக்கும் முதல் எதிரி நீங்கள் தான்..

2) உங்கள் முன்னால் முன்னேறிக்கொண்டிருக்கும் நண்பனை தொட்டுவிட ஆசை. முடியவில்லை, மேலும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்யாமல், மாறாக பொறாமை சுரக்குமேயானால், நீங்கள் உங்கள் இரண்டாவது எதிரியை உள்ளுக்குள்ளே அனுமதிக்கிறீற்கள். பொறாமை மனதில் தோன்றாதவரை நீங்கள் ஹீரோ. தோன்றிவிட்டால் உங்களைப் போன்ற ஒரு எதிரியை படைத்த கடவுளாலும் படைக்க முடியாது.
3) எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தள்ளிப்போடுதல் அலலது தாமதப்படுத்தும் பழக்கத்தை கொண்டிருந்தீர்களேயானால் உங்களின் சோம்பேறித்தனத்தின் மூலமாக உங்களது மூன்றாவது எதிரியை வளர்க்குறீர்கள்.

4) உங்களின் செயலுக்கு வெற்றி கிடைக்காமல் போகும் பட்சத்தில் அந்தத் தோல்விக்கான வழி வகைகளை ஆறாய்ந்து மேலும் துடிப்புடன் செயலாற்றாமல் சுய இரக்கம் கொண்டு, உங்களை நீங்களே ஆறுதல் படுத்திக்கொண்டீர்களேயானால் உங்களது நான்காவது எதிரியை சம்பாதித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

5) தன்முனைப்பு இல்லாமை, வெட்கப்படுதல் கூட தனிமனித முன்னேற்றதுக்கு தடைகற்கள் தான்.

இப்படிப்பட்ட எதிரிகளை அழிக்காமல் உங்களுக்குள்ளே வைத்திருப்பீர்களேயானால், நஞ்சை தனக்குள்ளே வைத்துக்கொண்டு சாகாத பாம்பைப் போல
நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கும் நீங்கள் எதிரியாகிவிடுவீர்கள்.

தோல்விகளை வெற்றிகளைப்போல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்பழகுங்கள். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெற்றிகளை நெருங்கமுடியாது. நம் குறைகள் நமக்குத் தெரியாவிட்டால் பின்பு நம் குறைகளே நம் இயல்பாகிவிடும்.

நம் முன்னேற்றத்துக்கு தடைபோடும் எதிரிகளை களைவோம்.

இந்தியா ஒளிர்கிறதாம்

























































போக்குவரத்து சட்டத்த எப்படி மதிக்கணும்னு இவுங்கள பார்த்துதான் தெரிஞ்ச்சுக்கணும்







விழுந்து விழுந்து சிரிக்கனுமா இதப் படிங்க


1) Sardar proposed a Girl . . .
Girl said 'I'm 1 year elder to you' . . .
Sardar said 'Oye No Problem Soniye, I'll marry you NEXT YEAR.

2) Sardar : I hav'nt slept all nite in the train.
Friend : why?
Sardar : Got upper berth.
Friend : why didn't you exchange?
Sardar : Oye, there was nobody to exchange in the lower berth..

3) A man asked sardarji, why Manmohan singh goes walking at evening not in the morning. Sardarji replied ''Arey bhai Manmohan is PM not AM''

4) Flash news: A 2 seater plane crashed in a graveyard in punjab .
Local sardars have so far found 500 bodies and are still digging for more..

5) Three Construction workers are working on the 20th floor of a tall building in Bombay. One is a Mallu, the second is a Bengali and the third is a Sardarji. Every day all the three meet in the lunch hall and have their lunch together.
One fine day-the Mallu opened his lunch box and finds idlis in the box. He says " I am fed up of eating these idlis daily. If I find idlis in the box tomorrow, i will jump from the 20th floor and die".
Next the Bengali opens his lunch box and finds Fish in it and says, If I find fish in my lunch box tomorrow, I am going to jump from the 20th floor of this building and die".
Next the Sardarji opens his lunch box and finds Parathas in it and says "Mother promise, if I find parathas in my box tomorrow I am also going to jump from the 20th floor"
Next day the three friends meet in the lunch room for lunch.
Mallu opens his lunch box and finds Idlis and promptly jumps from the 20th floor and dies.

The Bengali opens his lunch box and finds fish in it and jumps from the 20th floor and dies.
Sardarji opens his box and finds parathas and he also jumps from the 20th floor and dies.

In the combined funeral held for all the three friends by their colleagues,


the Mallu's widow says "I did not know he hated idlis so much. If not I would have packed something else for his lunch".
The Bengali's widow says "I did not know he hated fish so much. If not I would have packed something else for his lunch"
The sardarji's widow says "I do not understand what went wrong. My husband always prepared his own lunch!"

6)
Urine Test
Two sardarjis were sitting outside a clinic. One of them was crying like anything.
So the other asked, "Why are you crying?"
The first one replied, "I came here for blood test"
Second one asked, "So? Are you afraid?"
First one replied, "No, not that. During the blood test they cut my finger"
Hearing this the second one started crying.
The first one was astonished and asked other, "Why are you crying?"
The other replied, "I have come for my urine test."

7)
A train suddenly deviated from the tracks and ran onto the nearby fields before returning on the tracks again.
The passengers were horrified at this. At the next railway station, the driver was caught and questioned.
He was a sardar and explained that a man was standing on the tracks and he refused to budge. The authorities asked him, "Sardarji, are you mad? Just to save one person, you put so many lives in danger.
You should have overrun that person."
The sardar replied: "Exactly, that is what I was doing, but this idiot started running towards the field when the train came very close."

8)
One Sardar was enjoying Sun on a Beach in UK.
A lady came and asked him, " Are you relaxing" Sardar answered '" No I am Banta Singh"
Another Guy Came and asked the same Question. Sardar answered " No No Me ! Banta Singh"
Third one came and asked the same question, Sardar was totally annoyed and decided to shift his place.
While walking he saw another Sardar enjoying the Beach.
He went and asked him " Are you Relaxing?".
The other Sardar was much educated and answered "Yes I am relaxing.
The Sardar slapped him on his face and said "Idiot, they are all searching for you and you are sittinghere

கலாச்சார சீரழிவுக்கு துனை போகும் துறைகள்

இன்றைய உலகில் சினிமா மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கு துறையாக, நல்ல செய்திகளை கொண்டுசெல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கிறது. அதே சமயத்தில் சில மோசமான வழிகாட்டுதலையும் அது உண்டாக்காமல் இல்லை.

இந்திய சினிமா பெண்களின் ஆடை விசயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்ததன் மூலமாக இந்திய பாரம்பரிய கலாச்சார சீரழிவுக்கு காரணமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆரம்பகால சினிமாக்களில் பெண்கள் ஆபாசமாக நடிக்கவில்லை, சினிமா மோகம் மக்களிடம் வளர வளர
சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தது, நடிகைகள் பணத்துக்காக ஆபாசமாக நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் நடிகையாவதற்கு அதுவே தகுதியாக சினிமாக்காரர்கள் கொண்டுவந்துவிட்டனர்.

பனத்துக்காக நடிகைகள் அப்படி நடித்தார்கள் என்று சொன்னால் அது ஓர் அளவுக்கே உண்மை, ஏனெனில் இன்றைக்கு நடிக்கும் நடிகைகளுக்கு பணம் ஒரு பொருட்டல்ல காரணம் அவர்கள் நன்கு படித்த, வசதிபடைத்த மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பணத்தை விட பேர், புகழின் மீது ஒரு ஏக்கம். அதை அடைவதற்கு இவர்கள் ஆபாசமாக நடிப்பதற்குமேலே ஒரு படி சென்று ஆடையே இல்லாமல் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். (உ.த மல்லிகா ஷெராவத் படம் ; மித்)


சினிமாவை வளர்ப்பதற்கு ஊடகங்கள் தேவை, ஊடகங்களின் வருமானத்திற்கு சினிமா தேவை. ஆக இந்த இரண்டும் பின்னிப் பினைந்து ஜடை போட்டுக்கொண்ட தொழிற்களாகிவிட்டன. அதனால் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகங்கள் தட்டிக்கேட்காமல் விட்டதோடில்லாமல் நடிகைகளின் ஆபாசப்படங்களையும் அவர்களை பற்றிய உப்புக்கு பிரயோசனம் இல்லாத செய்திகளை வெளியிட்டும் தன் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது.


மேலும், இவர்கள் செய்யும் கூத்துக்களை பாராட்டியும் கவுரவிக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இவர்களுக்கு பட்டங்களையும், உச்ச பச்ச மரியாதையையும் தந்து இவர்களின் இழி செயல்களை ஞாயப்படுதுகின்றன.



என்றைக்கு இந்தியப் பெண்கள் உலக அழகிப்பட்டம் வாங்கிவந்தார்களோ அன்றிலிருந்து மாடெலிங் துறை மற்றும் பேசன் டிசைனிங் துறையின் வளர்ச்சியின் வேகம் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.

அறிவுடைய, நன்கு படித்த வசதிகொண்ட மேல் வர்கத்துப்பெண்கள் அறைகுறை ஆடையில் சினிமாவிலும், அரைநிமிடம் வந்து போகும் விளம்பரப்படங்களிலும் வருவதுமட்டும் அல்லாமல், பொது நிகழ்சிகளிலும் அத்தகைய ஆடைகளில் வருவதை பார்க்கும் சாதாரன கீழ்தட்டு குடும்பத்துப் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் இப்படி ஆடை அணிவது ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைக்கின்றன.

படித்தவர்கள் நல்ல வழிக்கட்டியாய் இல்லமல் போனதன் விளைவே இன்றைக்கு தெருக்களில் கூட நம் பெண்கள் துனிந்து ஆபாசமாக ஆடைஅனிந்து வருவதை பார்க்கமுடிகிறது.

ஆக மாடெலிங் மற்றும் பேசன் டிசைனிங் துறைகள் கவர்ச்சி கண்ணிகளின் விளைநிலமாக விளங்குகின்றன. சினிமா விளைச்சளுக்கு நீர் பாய்ச்சி அறுவடை செய்கிறது. ஊடகங்கள் இவர்களை சந்தைப்படுத்துவதற்கு துனை போகின்றன.






(எங்கே செல்லும் இந்தப் பாதை.)











வாழ்வின் கடைசி தருணங்களில் ஒருவர் எடுத்த மிக அறிய புகைப்படம்

சுமத்ராவில் ஏற்பட்ட முப்பத்தி இரண்டு அடி உயர சுனாமி அலை
கடவுள் பக்தி உள்ளவரோ, கடவுள் பக்தி இல்லாதவரோ, நல்லவரோ கெட்டவரோ எல்லோரும் இயற்கைக்கு முன் ஒன்று தான்.

நீங்கள் கடவுளை வணங்கினாலும் வணங்காமல் போனாலும் நடப்பது தான் நடக்கும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

பிகு;
இந்தப் படத்தை எடுத்தவர் இப்பொழுது உயிருடன் இல்லை.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன.
இது காதல்.

இலக்கியத்தில் இதற்குத்தான் தலையாய இடம்..
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்துகிறத்து.

நீதி மன்றங்களில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளை கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை தாங்குகிறது.

பார்க்கப்போனால் பசியைவிடவா இது பெரிது.
மானத்தை விடவா இது முக்கியமானது. ஆனால் பல்லூழிக்காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது. அந்நியர் வேதப்படி ஆதாமும் ஏவாலும் ஆரம்பித்து வைத்த கதை. தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

காதல் யாரைத்தான் விட்டு வைத்தது, அணுவைத்துலைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள்.
அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு காதலியை வைத்திருந்தான்.
கணவனைக் கொன்று, அவன் மனைவியைத் திருடிய ஒரு மன்னன் அதற்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.

காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற்குரியவர்கள்.
காதல் கதை எழுதாத கதாசிரியர்கள் கால வெள்ளத்தில் அழிந்து போகிறவர்கள்.
காதல் கவிதை பாடாத கவிஞர்கள் கற்பனையே இல்லாதவர்கள்.

காதல் ஒரு முறை தான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன. அனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே.
நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம் ஒருமுறை தான் வருமென்று சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கொஞ்சம் கவனியுங்கள்.

இலக்கியத்தோடு நான் முரன்படுகிறேன்!
இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம்.
இளமையில் வருவது காதலல்ல என்பது என் கருத்து.


உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம்.
பள்ளியரையிலேயே இருக்கத் தோன்றுகிறது யென்றால், அது மயக்கம்.
பகலுமில்லை இரவுமில்லை யென்றால் அது சதைப்பசி.

இளமைக்காதலுக்கு இது தான் மிஞ்சுகிறது.
இது எப்படி காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.

இலக்கியம் இலமைக்காதலை பறைசாற்றுகிறது.
சரித்திரம் இளமைக் காதலைச் சாவிலே முடிக்கிறது.

காதல் எட்டி நிற்கும் வரை இனிக்கிறது.
கட்டி முடித்த பின் கசக்கிறது.
தத்துவம் கிடக்கிறது, அநுபவம் இதைத்தான் சொல்கிறது.
நிறைவேராத காதலே அழியாத இலக்கியம்!
காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தால்!
காதல் உயர்வானது, அது நிறைவேராவிட்டால்!
தோல்வியுரும் காதல் எதுவோ அதுதான் காதல்!

என் தத்துவம் இதுதான்:
காதல் இரண்டு வகைப்படும்
ஒன்று தோல்வியுறுவது!
மற்றோன்று முப்பது வயதுக்கு மேல் வருவது.

பிகு:
காதல் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்